திருநெல்வேலியின் சிறப்புகளில் ஒன்று தனியார் பேருந்துகள். வெளிப்புற தகரங்கள் பளபளக்க பட்டையாக ஒரு வண்ணம் அடித்த நகர பேருந்துகள் கண்களை கவரும். இரண்டு அல்லது மூன்று ஆங்கில எழுத்துகள் தான் பேருந்து பெயர்கள்.
பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவது மேட்டுத்திடல் - நெல்லை நகரம் தடத்தில் தான். அதே சமயம் சுற்று வட்டார கிராமங்களுக்கும் தனியார் பேருந்துகள் உண்டு.
பேட்டை, சுத்தமல்லி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், வெள்ளாளன்குளம், கோபால சமுத்திரம், நரசிங்க நல்லூர், கருங்காடு, காந்தி நகர், மேலப்பாளையம், கொங்கராயங்குறிச்சி, ஆழ்வார் கற்குளம், முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், கருங்குளம், சேரகுளம், கலியாவூர், பாறைகுளம், அனவரதநல்லூர், ஆழிக்குடி, அய்யனார்குளம் பட்டி, சிவந்திப்பட்டி, திருமலை கொழுந்துபுரம், மேலப்பாட்டம், கீழப்பாட்டம், நடுவக்குறிச்சி, மணப்படை வீடு, நாரணம்மாள்புரம், பாப்பையாபுரம், பாலாமடை, ராஜவில்லிபுரம், சங்கர் நகர், அணைத்தலையூர், வடக்கு செழியநல்லூர், ராஜா புதுக்குடி, தெற்கு செழியநல்லூர், தென்கலம், நாஞ்சான்குளம், மதவக்குறிச்சி, மானூர், பள்ளமடை, கீழப்பிள்ளையார்குளம், பாப்பாக்குடி, என்ஜிஓ காலனி, மருதகுளம், கோவை குளம், தெய்வநாயகப்பேரி ஆகிய பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
90களில் இருந்த பேருந்துகள்
ஆண்டனி கம்பெனி - Antony, SSR, SST, SRS, SK
ஞானமணி கம்பெனி - MGG, GMT, ADJ
மயில் வாகனம் கம்பெனி - MPR
SGKR கம்பெனி - SGKR
ARG கம்பெனி - ARG
தனபால் கம்பெனி - DPT, DPR, DSR, DHANAPAUL, DHANAPERINBAM, DANIEL, IMPERIAL
வேணி கம்பெனி - KRISHNA VENI
TPC ராஜா கம்பெனி - TPC ராஜா
லயன் கம்பெனி - Lion
ஆண்ட்ரூஸ் கம்பெனி - SPM, SPR, ST. ANDREWS
சீதாபதி கம்பெனி - ABC, SBC, SSMS
ஜெயராம் கம்பெனி - JRT
விஸ்வம் கம்பெனி - KVV
தனியார் பேருந்துகள் வேகமாக செல்லக்கூடியவை. குறிப்பாக SPM 4 பேருந்தில் ஏற வாய்ப்பு கிடைக்காதா என மனம் ஏங்கும். 9B - ARG பேருந்து வேறொரு சிறப்பம்சம் உள்ளது.
தனியார் பேருந்துகள் கை காட்டினால் நிற்பவை. வயதானோர் இயலாதவர்களுக்கு நடத்துனர்கள் உதவுவார்கள், பால் கேன்கள், காய்கறிகள் மூட்டைகள், சைக்கிள், ஆட்டுக்குட்டி என எல்லாவிதமான லக்கேஜ்ம் ஏற்றிக்கொள்வார்கள். நடத்துனர்கள் தேடி வந்து டிக்கெட் கொடுத்து செல்வார்கள். வழக்கமான நடத்துநர்கள் என்றால் டிக்கெட்டை கொடுத்து விட்டு பணத்தை மெதுவாக (சேரும் இடத்திற்கு முன்பாக) வாங்கி கொள்வார்கள்.தற்போது அந்த நிலை இல்லை.
நடத்துனர்களின் இன்வாய்ஸ் பேப்பரில் எத்தனை ஆட்கள், எத்தனை பாஸ், எத்தனை லக்கேஜ் என்று இடம் பெற வேண்டும். எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்ற விவரமும் வேண்டும்.
செக்கிங் / சூப்பர்வைசர் வந்தால் பயணிகளை எண்ணிவிட்டு இன்வாய்ஸ் பார்ப்பார். எண்ணிக்கையில் மாற்றம் இருந்தால் நடத்துநரிடம் விசாரிப்பார், பயணிகளிடம் டிக்கெட் டிக்கெட் என்று கேட்பதில்லை.
தற்போது உள்ள தனியார் பேருந்துகள்
பாலமிதுஷா, கிருஷ்ண வேணி, நாகூர் ஆண்டவர், PKT, சுந்தரி, VSP அகிலா, SMC, சரவண பாலாஜி, CTR, GOOD SAMARITAN SGKR, MPR, LION, ஆனந், ரேகோபாத்,SSR, ANTONY, SKS, SSMS, SREEMATHI, GNR, St. Andrews, SPR