எழுத்தாளர் வாசு முருகவேலின் நூல்களில் நான் வாசித்த நாலாவது நூல். வழக்கம் போல வேறு களத்தை எடுத்து எழுதியுள்ளார். இந்த முறை இலங்கையின் கிழக்கு பகுதி தான் களம்.
ஈழ இலக்கியத்தின் போக்கு பற்றி முன்னுரையில் பேசும் வாசு, ஈழ இலக்கியத்திற்கு தனது மனதில் பட்டதை எழுதிக் கொண்டே இருப்பேன் என்கிறார்.
134 பக்கங்கள் மட்டுமே கொண்டது தான் ஆக்காண்டி நாவல். ஆக்காண்டி என்றால் ஆள்காட்டி பறவை. [ஆக்காண்டி - ஆக்காட்டி - ஆள்காட்டி]
தொடர்ந்து எழுதியிருக்க வாய்ப்பில்லை, கொஞ்சம் எழுதி கண்ணீர் வடித்து, கொஞ்சம் இடைவெளி விட்டு, என்று தான் எழுதி இருக்க முடியும்.
வார்த்தைகளாக கடக்க முடியவில்லை, வலிகளாக மனதில் ஒட்டி கொள்கிறது.
"இலங்கையில் கொழும்பு செட்டி தெருவில் மட்டும்தான் புத்தர் சிரிப்பார். அவர் சீனாவில் இருந்து வந்த புத்தர்".
இவரின் தேர்ந்த எழுத்துக்கு ஒரு சோற்றுப்பதம் மேலே உள்ள வரிகள்.
"பல்லேகல்லவின் தீச்சாம்பலில் இருந்து எழும்பிய கரும்புகைகள் நீல மேகத்தில் உறைந்து ஸ்ரீ தலதா மாளிகையைக் கடந்து போன போது இன்னும் மக்காமல் தங்கத்தாலான பேழையில் பத்திரமாக இருக்கும் புத்தரின் புனித ஒற்றைப் பல் இளித்து கொண்டது."
இந்த வரிகள் எள்ளலலா? வலியா? என்பதை வாசிப்பவர் வசம் விட்டுவிட்டார்.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கே முட்டை வைத்தாய்...
என்ற நீண்ட கவிதையோடு முடித்திருக்கிறார்.
காத்திருப்பேன் இவரின் அடுத்த புத்தகத்துக்கு.