முதலில் சேர்ந்தவர்கள் இடையே
சுணக்கம் இருந்தது இணக்கம் இல்லை!
அடுத்து வந்தவர்களால் பிணைப்பு இருந்தது.
பிசிறில்லை!
இவன் ஒருவன் வந்தபின் தான்
கலகலப்பு வந்தது!
அண்ணே என்ற சொல்லை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியது அவனே!
கனவோடு பேசிக்கொண்டவர்கள்
நிஜத்தை நெருங்கி பார்த்தார்கள்!
பகவான்கள் மட்டும்
பகவான்களாகவே இருந்தார்கள்!
சூரியனை பார்த்து திசை மாற்றி
கொள்ளும் சூரியகாந்தி
மலர்களாய் தேநீர் கடையில்
நின்றிருந்தோம்!
சூரியன் மறைந்த பின்
கூட்டுக்கு திரும்பும் பறவைகளானோம்!
சம்பளம் வரவில்லை என்றாலும்
சந்தோசத்துக்கு குறைவில்லா
நாட்கள் அவை!
அந்த மாலை நேர தேநீர்
மீண்டும் வாய்க்காது!
செதில் செதிலாய்
சிதைந்து விட்டாலும்
நட்பின் வாசம்
நாசிக்குள் நிறைந்திருக்கும்.
எங்கள் மூச்சில் கலந்திருக்கும்!!!
சுணக்கம் இருந்தது இணக்கம் இல்லை!
அடுத்து வந்தவர்களால் பிணைப்பு இருந்தது.
பிசிறில்லை!
இவன் ஒருவன் வந்தபின் தான்
கலகலப்பு வந்தது!
அண்ணே என்ற சொல்லை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியது அவனே!
கனவோடு பேசிக்கொண்டவர்கள்
நிஜத்தை நெருங்கி பார்த்தார்கள்!
பகவான்கள் மட்டும்
பகவான்களாகவே இருந்தார்கள்!
சூரியனை பார்த்து திசை மாற்றி
கொள்ளும் சூரியகாந்தி
மலர்களாய் தேநீர் கடையில்
நின்றிருந்தோம்!
சூரியன் மறைந்த பின்
கூட்டுக்கு திரும்பும் பறவைகளானோம்!
சம்பளம் வரவில்லை என்றாலும்
சந்தோசத்துக்கு குறைவில்லா
நாட்கள் அவை!
அந்த மாலை நேர தேநீர்
மீண்டும் வாய்க்காது!
செதில் செதிலாய்
சிதைந்து விட்டாலும்
நட்பின் வாசம்
நாசிக்குள் நிறைந்திருக்கும்.
எங்கள் மூச்சில் கலந்திருக்கும்!!!