ரயிலில் அம்மா அப்பா
பசிக்குது, பார்த்த பசி
தீராது எதாவது
காசு போடுங்க என்று
பிச்சை கேட்கும்
பிச்சைகாரனுக்கு உண்மையில்
பசிக்கிறதா என்பதை
உணரமுடியவில்லை.
அவன் கையை பற்றி
இழுத்து போய் கடையில்
உணவு வாங்கி தர
நேரமும் இல்லை!
அவசர அலுவலில்
இருந்தாலும் 10௦ மணிக்கு
அடிவயிறு காலை
உணவு உண்ணாததை
நினைவு கூறுகிறது!
ருசி இல்லா உணவை
தின்று பழகிய நாக்கு
அம்மாவின் கை மணத்திற்காக
பசித்து கிடக்கிறது !
மனசு மரத்து போகும் போது
வயிறும் பசிக்க
மறந்து விடுகிறது!
மாத கடைசியில் அறைக்கு
வரும் நண்பன் நன்றாக
சாப்பிட வேண்டும்
என்பதற்காக, எனக்கு
பசிக்கல ரெண்டு புரோட்டா
போதும் நீ சாப்பிடு
என்று சொல்லும் போது,
என்னனு தெரியல மாப்ள
எனக்கும் இன்னைக்கு வயறு
கம்முனு இருக்கு என
அவன் பதில் கூறும் போது
பசி கூட நட்பை பறைசாற்றுகிறது !