Wednesday 25 November 2015

சென்னை மழை



கடல் கண்டும் படகில்
செல்லாதவர்களுக்கு படகு
பயணம் வாய்த்தது !

அரசியல்வாதிகள் செல்லும் போது
அண்ணாந்து பார்த்தவர்களுக்கும்
கிடைத்தது ஹெலிகாப்ட்டர் !

கூவமும் அடையாறும்
நதிகள் என்று அறியாதவர்களுக்கு
காட்டியது நதியின்
வனப்பை!

தண்ணீருக்கு நிலவும்
மாநில அரசியலை நிறுத்தி
 நிவாரணம்
எனும் கட்சி அரசியலை
புகுத்தியது !

நன்னீரை தான்
பெய்தது மழை
மண்ணில் விழுந்த உடன்
கழிவு நீராய் மாறிவிட்டது !

பணக்காரனையும் உதவி
கேட்க வைத்தது !

நீர் மேலாண்மை பற்றி
பாடம் நடத்தி தைரியமாய்
தட்டி கேட்டது !

ஆனால் ஏழைகளின் குடிசை
மட்டும் மழையின்
கண்ணுக்கு தெரியாமல்
போய்  விட்டது
ஏழைகளின் மீதாவது
கொஞ்சம் இரக்கம்

காட்டி  இருக்கலாம்!!!