கடல் கண்டும் படகில்
செல்லாதவர்களுக்கு
படகு
பயணம் வாய்த்தது !
அரசியல்வாதிகள்
செல்லும் போது
அண்ணாந்து
பார்த்தவர்களுக்கும்
கிடைத்தது
ஹெலிகாப்ட்டர் !
கூவமும்
அடையாறும்
நதிகள்
என்று அறியாதவர்களுக்கு
காட்டியது
நதியின்
வனப்பை!
தண்ணீருக்கு
நிலவும்
மாநில அரசியலை நிறுத்தி
நிவாரணம்
எனும் கட்சி அரசியலை
புகுத்தியது
!
நன்னீரை
தான்
பெய்தது
மழை
மண்ணில்
விழுந்த உடன்
கழிவு நீராய் மாறிவிட்டது !
பணக்காரனையும்
உதவி
கேட்க வைத்தது !
நீர் மேலாண்மை பற்றி
பாடம் நடத்தி தைரியமாய்
தட்டி கேட்டது !
ஆனால் ஏழைகளின் குடிசை
மட்டும்
மழையின்
கண்ணுக்கு
தெரியாமல்
போய் விட்டது
ஏழைகளின்
மீதாவது
கொஞ்சம்
இரக்கம்
காட்டி இருக்கலாம்!!!