கல்லூரி இறுதியாண்டில்
Project என
ICF லும் அயனாவரத்திலும்
அலைந்து திரிந்தேன் !
வேலை கிடைத்து
வேளச்சேரிக்கு வந்தேன் .
வேலை இல்லா வேதனை
காலங்களும் வேளச்சேரியில் உண்டு !
காரபாக்கத்தில்
கௌரவ தோற்றம் !
தரமணியில் பார்த்த
வேலை தரமில்லாத வேலை என்று
கல்லூரி சாலையில்
நுழைந்தேன் !
கல்லூரி சாலையில்
இருந்தும் பெண்களை
கண்டிராத கஷ்டகாலம் அது !
மீண்டும் வேளச்சேரிக்கு
வந்த போது
பணியும் பணியிடமும்
நன்றாய் அமைந்தது !
உள்ளகரத்தில் வழக்கறிஞர்களுடன்
இருந்த அறை
காற்றோட்டம் இல்லை
குறைவில்லாத கொசு கடி!
சைதைககு வந்த போது
புது வேலை
அலுவலகம் நந்தனத்தில் (நந்தவனத்தில்)!
அன்னியன் படத்தில்
எங்கள் அலுவலகம்
வருகிறது என்று
பெருமை பேச வைத்தது !
சைதை அறை
புது புது நண்பர்களை
அறிமுக படுத்தியது !
செம்மை கருதி
சேத்துபட்டுக்கு பணியை
மாற்றினேன் !
ரயில் பயணம்
சுவாரஸ்ய அனுபவம்
வித விதமான மனிதர்கள்!
பச்சை கிளி முத்துசரம் என்று
சந்தேக பட வேண்டாம் !
நான் சொன்னது
"சொல்ல சொல்ல இனிக்குதடா"
என பாடும் முதியவரையும்
"இறைவனிடம் கையேந்துங்கள்"
என்று பாடி
எங்களை இறைவனாக்கும்
பார்வையற்ற இளைஞரையும் !
அலுவலக நிமித்தமாய்
புது புது கனவுகளுடம்
பூந்தமல்லிக்கு
இடம் பெயர்கிறேன்
உங்கள் அன்பும் ஆசியும்
என்றும் எனக்கு
வேண்டும் !!!