Tuesday 25 September 2012

இடம் பெயர்கிறேன்


கல்லூரி இறுதியாண்டில் 
Project என 
ICF லும்  அயனாவரத்திலும் 
அலைந்து  திரிந்தேன் !

வேலை  கிடைத்து 
வேளச்சேரிக்கு  வந்தேன் .
வேலை  இல்லா வேதனை 
காலங்களும் வேளச்சேரியில்  உண்டு !

காரபாக்கத்தில்
கௌரவ  தோற்றம் !

தரமணியில்  பார்த்த 
வேலை  தரமில்லாத  வேலை  என்று 
கல்லூரி  சாலையில் 
நுழைந்தேன் !

கல்லூரி  சாலையில் 
இருந்தும்  பெண்களை 
கண்டிராத  கஷ்டகாலம்  அது !

மீண்டும்  வேளச்சேரிக்கு 
வந்த  போது
பணியும்  பணியிடமும் 
நன்றாய் அமைந்தது !

உள்ளகரத்தில்  வழக்கறிஞர்களுடன் 
இருந்த  அறை
காற்றோட்டம்  இல்லை 
குறைவில்லாத  கொசு  கடி! 

சைதைககு வந்த  போது 
புது  வேலை 
அலுவலகம்  நந்தனத்தில்  (நந்தவனத்தில்)!

அன்னியன் படத்தில் 
எங்கள் அலுவலகம் 
வருகிறது என்று 
பெருமை பேச வைத்தது !

சைதை  அறை 
புது  புது  நண்பர்களை 
அறிமுக  படுத்தியது !

செம்மை  கருதி 
சேத்துபட்டுக்கு பணியை 
மாற்றினேன் !

ரயில்  பயணம் 
சுவாரஸ்ய  அனுபவம் 
வித  விதமான மனிதர்கள்!

பச்சை  கிளி  முத்துசரம்  என்று 
சந்தேக  பட  வேண்டாம் !

நான் சொன்னது 
"சொல்ல  சொல்ல  இனிக்குதடா"
என  பாடும் முதியவரையும் 
"இறைவனிடம்  கையேந்துங்கள்" 
என்று  பாடி
எங்களை  இறைவனாக்கும்
பார்வையற்ற  இளைஞரையும் !

அலுவலக  நிமித்தமாய் 
புது  புது  கனவுகளுடம் 
பூந்தமல்லிக்கு 
இடம்  பெயர்கிறேன் 
உங்கள்  அன்பும்  ஆசியும்
என்றும்  எனக்கு 
வேண்டும் !!!