Thursday 20 June 2013

விடை தெரியாத கேள்வி -3



இன்று காலை போரூர் சிக்னலில் நான் கண்ட கட்சி.
ஒரு இளம் தம்பதியினர் இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்தனர்.
குழந்தை கொடியினில் காயும் துணி போல கை கால்களை தொங்க விட்டு டாங்கில் செல்லம் போல தூங்கி கொண்டிருந்தது. அந்த பெண் திருமணத்திற்கு கொண்டு செல்லும் கிப்டை நெஞ்சோடு அணைத்து கொண்டிருந்தார்.

கிப்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை குழந்தைக்கு கொடுக்க அவர்களுக்கு ஏன் மனம் வரவில்லை!

விடை தெரியாத கேள்வி ?

Tuesday 4 June 2013

மனதோடு ....!!!

மழையை ரசிக்க 
முடியவில்லை 
என் மனதில் மழையாய் 
பெய்தவளை நினைக்கையில் !

சாலையில் சேறடித்து 
செல்லும் கார்காரனை 
திட்ட மனம் வரவில்லை 
மனதோடு காதல் மழை!

மழை வெறித்த பின்னும்
குடை பிடித்துக் கொண்டிருந்தேன்
என்னை நனைக்கிறது
அவளின் காதல் முகம்!

மேகம் கலைந்து
வானம் வெறுமையாகி விட்டது
இவள் மட்டும் கனவுகளாய்
என்னில் நிறைந்திருக்கிறாள் !!

மனதோடு ....!!!