கன்று குட்டியாய் இருக்கும்
போது தெரிந்திருக்காது
பணக்கார முதலாளியின்
தன்மானத்துக்காக ஜல்லிக்கட்டில்
கலந்து கொள்வோமா இல்லை
ஏழை முதலாளியின்
வருமானத்துக்காக மூட்டை
சுமப்போமா என்று !
ஆண்மையை இழந்த பின்னும்
உணவளிபவனுக்காக உழைத்து
கொண்டிருக்கின்றன
காயடித்த காளைகள் !!