Wednesday 27 June 2012

சந்தோஷம்! சந்தோஷம்!


அருமை நண்பர் வெளி நாடு வாழ் இந்தியர் திரு. கந்தநாதன் எழுதிய கவிதை.
நாதன்  அவரின் முகம் பார்த்ததில்லை. முகம் பார்த்து கதைப்பது  காதலில் மட்டும் தான்.
நட்புக்கு நாற்றங்கால் தேவையில்லை. நட்பு தானே வளரும் காட்டு மரம்


ஊருக்குக் கிளம்ப முடிவு செய்து
பரிசுச் சாமான்களை வாங்கச்
செல்லுகையில் சந்தோஷம்!

அம்மாவிற்கு எது பிடிக்கும்?
அப்பாவிற்கு எது பிடிக்கும்?
தம்பி தங்கைக்கு எது பிடிக்கும்?

பிடித்தவற்றை மனதில் அசை போட்டவாறே
பார்த்துப் பார்த்து எடுத்து
தள்ளு வண்டியில் தள்ளும் போது சந்தோஷம்!

ஒன்றாய்ப் பழகிய நண்பர்களைக்
காணப் போகின்ற நினைப்பு வந்து
அடிக்கடி தொல்லைப் படுத்தும் சந்தோஷம்!

நாட்களை எண்ண எண்ண
பயணத்தேதி நெருங்கும் போது ஏனோ
இனம் புரியாத சந்தோஷம்!

வெய்யிலும் பொய்யிலும் வாழ்க்கை
இங்கே நடத்தினாலும் உற்றார் முன்
படாடோபமாய்க் காட்சி தருவதில் சந்தோஷம்!

பறந்து சென்று பார்வைகள் கலந்து
அன்பில் இதயங்கள் இடம் மாறி
கையில் இருந்த காசு கரையும் வரை சந்தோஷம்!
பறந்து போகும் நாட்களும்...மீண்டும்
பறக்கத் தயாராகும் நாட்களும் காட்டுமே உண்மையில்
பறந்து போகும் சந்தோஷம்!

Tuesday 26 June 2012

மந்திர புன்னகை!



 
வேலை  முடிந்து  அவசரமாய்
வீடு  திரும்பும்  போது
ரயில்  நிலையத்தில்
மல்லிகை  பூ  வாங்கி
கைப்பைக்குள்  வைக்கும்
சகோதரனின்  முகத்தில்  
கண்டேன்  
மந்திர  புன்னகையை!

Thursday 21 June 2012

காதல் கசிகிறது

நுரை முட்டும் கடல்
அலைகளை பார்த்துகொண்டிருந்த 
தருணத்தில் நீ கேட்டாய்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று !

நான் கைகளை விரித்து 
இவ்வளவு என்று சொல்ல 
வந்து நிறுத்தி கொண்டேன் !

கடலை கை நீட்டி 
கடலளவு என்று சொல்ல  
வந்து நிறுத்தி கொண்டேன் !

வானத்தை காட்டி
வானளவு என்று சொல்ல
வந்து நிறுத்தி கொண்டேன் !

‘பிடிக்கும்’ எவ்வளவு என்று
சொல்ல தெரியல என்றேன் !

நீ கண்ணீருடன் என்னை
கட்டி அணைத்தாய் !

உன் கண்ணீரில்
என் காதல் கசிகிறது !

Monday 11 June 2012

என்ன கொடுமை சார் இது


நேத்து நான் சன் டிவில அரட்டை அரங்கம் பார்த்தேன்.
அதுல புல்லா சின்ன சின்ன ஸ்கூல் பசங்க தான் பேசினாங்க 
ஒரு பையன் சொல்றான் வாத்தியார் நல்லா பாடம் நடத்தினா
நாங்க ஏன் சார் பிட் அடிக்கபோறோம் .
"அவன் பாடம் சொல்லி கொடுக்கிறவர வாத்தினு சொல்றான் ஆனா டிவி தொகுப்பாளர சார்னு சொல்றான்.

அத பாத்துட்டு மனசு கஷ்டமா போச்சு. வாத்தியார ரோல் மாடல நினச்ச காலம் போச்சு".

இன்னொரு மாணவன் சொல்றான் பிட் அடிக்கறது சாதாரண விஷயம் இல்ல ஒரு வர்சம் நடத்துனத ஒரு நைட்ல முக்கியமான கேள்வி எதுன்னு பாத்து எழுதிட்டு போய் தேர்வு கூடத்தில இருக்கிற ஆசிரியரையும் சமாளிச்சி எழுத வேண்டி இருக்குனு வருத்தபடுதான்.

ஒரு பொண்ணு சொல்லுது எங்களுக்கு ஓட்டுரிமை இல்ல இருந்தா மக்களுக்கு உதவுற சினிமா நடிகர்களுக்கு ஒட்டு போடுவோம்னு

அதுக்கு பதில் சொன்ன இன்னொரு பொண்ணு இவங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா அடுத்த நாள் பேப்பர்ல இது தான் வரும் 
அமலா பால் பால் வள துறை அமைச்சர் ஆனார். சுற்றுலா துறை அமைச்சராக
நண்பன்டா சந்தானம் பதவி ஏற்றார். அப்புறம் ஹன்சிகா, சகீலா இவங்களுக்கும் அந்த பொண்ணு பதவி கொடுத்தது.

பெண் சுதந்திரம் எப்படி இருக்கு பாத்திகளா?

இன்னொரு பொண்ணு அட்வைஸ் பண்றகிற பேருல நிறைய பேர் மொக்க போடுறாங்க. எங்கள எங்க போக்குல விட்டுருங்க

என்ன கொடுமை சார் இது

இன்னொரு பொண்ணு குடும்ப சூழல் எங்கள படிக்க விடல. எந்த அப்பா அம்மாவும் படிச்சு என்ன மாதிரி வானு சொல்ல மாட்டகிறாங்க 
ஏன்னா அவங்க மோசமான சூழல்ல இருகிறாங்க

[பெத்தவங்க தான் பட்ட கஷ்டத்த பிள்ளைங்க பட கூடாதுன்னு நினைச்சா பசங்க என்ன சொல்றாங்க பாருங்க]

இதுக்கு தமிழ் நாட்டோட மாபெரும் மீடியாவான சன் டிவி சப்போர்ட்.
மீடியாக்கள் நம் சமுதாயத்தை எவ்வளவு தூரம் சீர்குலைகிறது. இது ஒரு உதாரணம் தான் இத மாதிரி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடலாம்.
இதனால் தான் என்னவோ குருவாய் பார்க்க வேண்டிய ஆசிரியரை மாணவன் குத்தி கொல்லும் சம்பவம் நடைபெறுகிறது.