தோனி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் நடைபெற்று கொண்டிருக்கும் போது பாதியில் ஓடிவிட்டார் (ஓய்வு) என்று கதறும் ஹேட்டர்களுக்காக இந்த பதிவு.
கும்ப்ளேவில் இருந்து ஆரம்பிப்போம். ஏனென்றால் கும்ப்ளேவும் நாலு போட்டி கொண்ட தொடரில் மூன்றாவது போட்டியில் ஓய்வு பெற்றவர்.
கும்ப்ளே ஓய்வு பெற்ற தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.
மேட்ச் - டிரா
இரண்டாவது போட்டி மொகாலியில் நடைபெற்றது. காயம் காரணமாக கும்ப்ளே ஆடவில்லை. கும்ப்ளேவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா ஆடினார். அது மட்டுமே அணியில் செய்யப்பட்ட மாற்றம்.
மேட்ச் - வெற்றி
மூன்றாவது போட்டியில் கும்ப்ளே மீண்டும் வந்தார். ஹர்பஜனுக்கு பதிலாக ஆடினார்.
மேட்ச் - டிரா
கேப்டன்சி மாற்றினால் இந்தியா வெல்கிறது என்பதை உணர்ந்து அந்த போட்டியிலே ஓய்வு பெற்றார். அது அவர் 10 விக்கெட் எடுத்த டெல்லி மைதானம் என்பது கூடுதல் சிறப்பு.
நான்காவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
ஹர்பஜன் அணிக்கு திரும்பினார். கம்பீருக்கு பதிலாக முரளி விஜய் ஆடினார்.
முடிவு - வெற்றி.
முடிவுகளை மாற்றி வைப்பது கேப்டன்சி என்று நிருபித்தார் தோனி.
2014ல் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக தோனி ஆடவில்லை. கோலி தலைமை வகித்தார். சகா கீப்பிங் செய்தார்.
முடிவு - தோல்வி
இரண்டாவது போட்டியில் தோனி அணிக்கு திரும்பினார். மூன்று மாற்றங்கள்.
சகா - தோனி
ஷமி - உமேஷ்
கரன் - அஸ்வின்
முடிவில் மாற்றமில்லை. - தோல்வி
மூன்றாவது போட்டியில் ஒரே மாற்றம் ரோகித்துக்கு பதிலாக ராகுல்.
முடிவு - டிரா
வெற்றி பெற முடியாமல் போவதற்கு கேப்டன்சி காரணமாக இருக்கலாம் என யோசித்து, புதிய ஆண்டில் புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணியை ஆட வைத்தார். தனது ஆட்டத்திறன் டெஸ்ட் போட்டிகளில் குறைந்ததால் ஓய்வும் அறிவித்தார்.
எங்கேயும் ஓடவில்லை, ஆஸ்திரேலியாவில் இருந்து முத்தரப்பு ஒருநாள் தொடரையும் உலகக் கோப்பையையும் வழி நடத்தினார்.
சகா மீது கொண்ட நம்பிக்கையில் தான் டெஸ்ட் போட்டியில் தைரியமாக விலகினார்.
ஒருநாள் போட்டிகளுக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக அம்பதி ராயுடு தான் இருந்தார். அதனால் தான் தோனி தனக்கு குழந்தை பிறந்ததற்கு கூட நாடு திரும்பாமல் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடினார்.