மகிழ்ச்சியை மறந்துவிட்டு
மன நிம்மதி இல்லாமல்
மருகும் மாநகர மக்களிடையே
மலர்ந்த மலர்கள் நாங்கள்!
காலை வெயிலில்
விரிந்து கொள்வோம்
மாலை மழையில்
நனைந்து கொள்வோம்
இடி, மின்னல், காற்று
தூசி எதையும் பார்த்து
கலங்குவதில்லை.
ஒவ்வொரு நிமிடத்தையும்
அனுபவித்து வாழ்கிறோம்!!!