டுவிட்டரில் சார்மினார் எக்ஸ்பிரஸ் என்று பெயரை பாரத்த உடனே ஈர்த்தது. கொஞ்ச காலமாக அச்சு பிரதி கிடைக்காததால் நர்சிம் அவர்களின் மதுரை கதைகளை வாசித்த பின்பே இதை வாசிக்க முடிந்தது.
நாவல் என்றாலே எளிய மனிதர்களின் வலிமிகு வாழ்க்கை தான் என்ற இலக்கணத்தை உடைத்து, தொட்டது எல்லாம் துலங்கும் ஒரு இளைஞனின் இயல்பான வாழ்க்கையை எழுதியுள்ளார் (மற்றவைகளை மறைத்துள்ளார் எனவும் கொள்ளலாம்).
இது போல் ஆங்கிலத்தில் சேட்டன் பகத் போன்றோர் செய்தாலும் தமிழுக்கு நர்சிமே முதன்மை என நினைக்கிறேன். நர்சிம் சேட்டனை விட கொண்டாடப்பட வேண்டியவர். ஏனென்றால் எழுத்து நடை அப்படி. சின்ன சின்ன உவமைகள். கவித்துவமான சொற்கள் என ராஜாங்கம் செய்துள்ளார்.
கல்கியின் நந்தினிக்கு பிறகு நாலே வரிகளில் ஒரு பெண் கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறார். இது போல் இன்னும் இவர் நிறைய படைப்புகளை தர வேண்டும் என எண்ண வைக்கிறது.
பாலாவின் அரைகுறை உருது, பாபுவின் கன்னடம், மதுரக்கார பயலுக கேடிங்க சத்தமில்லாமல் மூன்றாவது மொழி தெரிந்து வைத்துள்ளனர்.
அப்பா கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும், காபியிலே ஈர்க்கிறார் ரத்னாம்மா.
உசேன் சாகர் ஏரி, புத்தர் சிலை சரோஜா படத்தில் வந்துள்ளதால் காட்சி படுத்துதல் நமக்கு எளிதாகுகிறது.
கதைக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் எஸ்கேபி கருணா, எனது அரசியல் பதிலீடுகள் பிடிக்காமல் ப்ளாக் செய்தவர்.
அதே சமயம் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகளை புகழ்ந்து, தமிழக ஆட்சியாளர்களை சாணியால் அடித்துள்ள நர்சிம்க்கு என்ன பதில் சொல்லி இருப்பார். ஒருவேளை புரிதல் உள்ள நட்பாய் இருக்கலாம் அவர்கள் நட்பு.
மிர்ணாளினி என்ற வார்த்தை உபயோக படுத்தாமல் எப்படி எழுத முடியும். ஆம் எக்ஸ்பிரஸின் வேகத்தை அதிகரிப்பதே மிர்ணாளின் பாத்திரம் தான்.
அட்டைப்பட வடிவமைப்பு இந்தி எதிர்ப்பை முன்னிட்டு நிலையத்தின் பேர் எழுதும் பலகையில் ரயிலின் பெயர் அதுவும் நன்றாகவே இருக்கிறது.