Friday 4 August 2023

04-08-2003

இருபது ஆண்டுகளுக்கு முன்
பழைய புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
போல உள்ளது.
கல்லூரியின் முதல்நாள்
நினைவு !

முதல் தலைமுறை
பட்டப்படிப்பு
தமிழ் வழி கல்வியில்
பயின்று பொறியியல்
கல்லூரியில்,
பயமும் பதட்டமுமான
முதல்நாள் !

ஐந்தாம் வகுப்பிற்கு
பிறகு இருபாலர்
வகுப்பு
தயக்கமும் சந்தோசமுமான
மனநிலை !

மலையடிவாரத்தில்
இயற்கையும் வனப்பும்
மிக்க கல்லூரி !
விடுதியில் இருந்து 
கல்லூரிக்கு
அழைத்து செல்ல
சிறப்பு காவலர்கள் !

இயந்திர பொறியியல்
துறைத்தலைவர்
சிறப்புரை ஆற்றிய பின்
அடுத்த ஆறு மாதத்திற்கு
ஈ செக்சன் என்றார்கள் !

பொறியியல் படிப்பு
நிறைய நட்புகள்
அழகான நாட்கள்
ஆத்மார்த்தமான அனுபவங்கள் 
ஆங்கிலத்தில் தேர்வுகள் 
எல்லாவற்றிற்கும் துவக்க
நாள் அது !!!

No comments:

Post a Comment