Saturday 30 March 2013

எங்கள் நட்பு தொடர்கிறது.

31-03-09 அன்று நான் எழுதியது 

பரிதாபாத், தில்லி, ராயபுரம், வேளச்சேரி, திருச்சி, வில்லிவாக்கம், பூந்தமல்லி என பல இடங்களில் இருந்து நான்காம் ஆண்டை கடக்கிறது எங்கள் நட்பு.

ஒரு வருடமாய் கல்லூரி வாசத்தையும் 
நண்பர்கள் கூட்டத்தையும் 
மறந்திருந்த எனக்கு மீண்டும் 
நண்பர்கள் கூட்டத்தை தந்தது பெல்!

மனமுடைந்து போன எனக்கு 
மகிழ்ச்சியை தினம் தினம் தந்தது 
எங்கள் நட்பு!

கேண்டீனில் விஸ்தாரமாய் உட்கார்ந்து 
தூங்கி, காபி குடித்து தொடங்கிய 
எங்கள் நட்பு,

சேரில் ஷேர் ஆட்டோவாய் உயர்ந்தது 

நாங்கள் 8 பெரும் தனி அணி 
ஆனால் தனித்ததில்லை 

ஜீவா பூங்கா, உஸ்மான் சாலை 
அஞ்சப்பர் என எங்கள் நட்பு 
சிறகடித்தது  !

உச்சகட்டமாய் மாயாஜால், அபிராமி 
தொட்டது எங்கள் நட்பு 

ஊட்டி முதல் கோவா வரை,
நெல்லை முதல் பாண்டி வரை 
எங்கள் கனவு பயணம் 
இன்றும் செல்வோம் 
வேலை இல்லாமல் இருந்தால் 

விவாதத்தில் பொழுதை சுவாரஷ்யமாக்கி 
கொள்ளும் எங்கள் நட்பின் 
வயது பத்து மாதம் !

பத்து மாதத்தில் நான் 
கடந்து வந்த பாதையில் 
நட்பின் வாசம் 

பத்து மாதத்திற்கு பிறகு 
கருவறை விட்டு வெளிவரும் 
குழந்தையாய் நகருகிறேன் 

தாயின் அரவணைப்பாய் 
எங்கள் நட்பு தொடரும் 
என்ற நம்பிக்கையில

Friday 29 March 2013

நீ

அடைமழை கால 
             தேநீர் நீ!
சுடும் வெயில்கால 
             இளநீர் நீ!
என் முன்னிரவின் 
             மெல்லிசை நீ!
என் பின்னிரவின் 
              கனவுகள் நீ!
என் தோட்டத்தில் 
              மல்லிகை நீ!
என் வானத்தின் 
               வானவில் நீ!
என் பயணத்தின் 
                ஜன்னல் இருக்கை நீ!
என் கவிதைகளின் 
                பிறப்பிடம் நீ!
என் காதலின் 
                உறைவிடம் நீ!
என் வாழ்வின் 
                 வசந்தம் நீ!
                  என்னவள் நீ!

என் வீட்டின் 
                மருமகளாய் நீ?

Sunday 24 March 2013

அசத்தியஅழகு!

குளிர் சாதன பேருந்தில் 
எனது எதிர் இருக்கையில் 
அமர்ந்திருந்தாள் அவள் !

ஒப்பனை ஏதும் 
இல்லாத முகத்தில்
சின்னதாய் ஒரு பொட்டு
மட்டும் வைத்திருந்தாள் !

பட்டியாலாவும் இல்லை
லெகின்ஸ்ம் இல்லை
சாதாரண சுடிதாரில்
வந்திருந்தாள் !

பெரிய ஆபரணங்கள்
அணிய வில்லை
கழுத்தை ஒட்டி சின்ன
சங்கிலி மட்டும் !

அசத்தியது அந்த அழகு!

இசை ஆர்வம் மிக்கவள்
என்பதை காட்ட
காதுக்குள் ஹெட் செட்டை
திணித்திருக்கவில்லை !

வெளியே வெயில்
சுட்டெரித்து கொண்டிருந்தது

அவள் பேருந்து பயணத்தை
ரசித்து கொண்டிருந்தாள்
நான் அந்த அழகை
ரசித்து கொண்டிருந்தேன் !

அந்த தருணத்தில்
டிரைவர் போட்ட
சடன் ப்ரேக்கால்
என் தூக்கம் கலைந்தது

கண் விழித்து பார்த்தால்
கரண்ட் கட் !