அவள் : காட்டு வேலையில்
கரை கண்டவள்.
அவர் : போல்ட்டு வேலைகளை
புரட்டி எடுப்பவர்.
அவள் : அதிகம் படிக்கவில்லை
கைத்தொழில் தெரிந்தவள்.
அவர் : அதிகம் படிக்கவில்லை
தொழில்நுட்பம் தெரிந்தவர்.
அவள் : மானூரை தாண்டியதில்லை
அதிகபட்சம் பாளையங்கோட்டையை பார்த்தவள்
அவர் : பல ஊர்களில் பணி செய்தவர்
ஐந்தாறு வெளிநாடு சென்றவர்.
அவள் : பேசிக்கொண்டே இருப்பவள்
அவர் : அதிகம் பேசாதவர்.
அவள் : நெல்லும் காய்கறியும் விளையும்
நஞ்சையில் பிறந்தவள்.
அவர் : எள்ளும் உளுந்தும் விளையும்
புஞ்சையில் பிறந்தவர்.
அவள் : வீட்டின் இரண்டாவது
பெண் குழந்தை.
அவர் : வீட்டின் இரண்டாவது
ஆண் குழந்தை.
இவர்களை இணைத்தது இறைவன் அருள்!
இவர்கள் திருமணம் நடந்தது 2005 ஆண்டு
இந்த தம்பதி வாழ வேண்டும் நூறாண்டு