1
கத்தரித் தோட்டத்தில்
புழு வந்ததென்று
வாங்கி வந்தான் மருந்தை
கடன்காரன் வார்த்தைகள்
ஜீரணிக்க முடிக்காமல்
மருந்தை உள்வாங்கி
நுரையை வெளிதள்ளி
கொண்டான்
நலிந்த விவசாயி !!!
2
முதல் வாரம் பள்ளி
சென்றுவிட்டு
என்னை உட்கார வைத்து
பாடம் நடத்தினாள்
என்னை சுற்றி எத்தனையோ
சிறார்கள் இருப்பதாக
கற்பனை செய்து
கொண்டாலும் என்னை
மட்டும் அடிக்கும்
மோசமான டீச்சர்
என் மகள் !!!
3
கண்ணாடி அறையில்
மாட்டிக் கொண்ட
பட்டாம்பூச்சி போல்
இருக்கும் அலுவலக சூழலை
மறக்க செய்வது
வீடு சேர்ந்ததும் நீ தரும்
ஒற்றை புன்னகையும்
ஒரு கோப்பை தேனீரும் !
4
பழைய டைரியை
புரட்டிய போது
கரிந்து கிடந்த
ரோஜாப்பூ சொல்கிறது
பசுமையான
பழைய காதலை !
5
தரிசு நிலத்தில்
வளர்ந்து நிற்கும் மரம்
நெடுஞ்சாலையில் கடக்கும்
பெயர் தெரியாத ஊர்
காட்டில் பூத்து கிடக்கும்
வாசமில்லா பூ
ஆற்றுக்குள் நனையாமல்
இருக்கும் பாறை
ஊரடங்கில் உணரப்பட்ட
தனிமை !
6
இரண்டு தவணை
தடுப்பூசி
முகக்கவசம்
கிருமி நாசினி
எதனாலும் அழிக்க
முடியவில்லை
கொரோனாவால் இறந்துவிட்ட
நண்பனின் நினைவுகளை !
7
அடை மழையால்
உயர்ந்து விட்ட
காய்கறி விலையை
குறைக்க மனம்
வரவில்லை வியாபாரிக்கு
விவசாயி அலைந்தான்
கடன் வாங்கி
மீண்டும் நடுவதற்கு !
8
ரோஜா காதலிக்கு
மல்லிகை மனைவிக்கு
சாமந்தி சாமிக்கு
செவ்வரளி நெடுஞ்சாலைக்கு
எனக்கு தலைப்பு
தந்தது சரக்கொன்றை !
Thank you
ReplyDeleteசெம பார்ட்னர்
ReplyDeleteநன்றி பார்ட்னர்
ReplyDeleteLovely❤❤❤
ReplyDeleteநன்றி
ReplyDelete