புகழ்பெற்ற மனிதர்களை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிடுவார்கள். பெரிய புகழை சேர்ந்தவர்களுக்கு நாணயம் வெளியிடுவார்கள். மாபெரும் புகழ் மிக்கவர்களுக்கு தான் பணத்தாளில் இடம் கிடைக்கும்.
இந்திய பணத்தாளான ரூபாயில் இடம்பெற்ற ஒரே முகம் காந்தி. ஆக தமிழர் யாரும் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை.
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு நாடான இலங்கையிலும் தமிழர் முகம் பணத்தாளில் இடம் பெறவில்லை.
பணத்தாளில் இடம் பெற்ற இரு தமிழர்கள் யார்?
1. ரெங்கநாதன் சீனிவாசன்
மொரிசியஸ் நாட்டின் அரசியல் தலைவரான இவரது முகம் மொரிசியஸ் நாட்டின் 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.
இவர் பிரிட்டிஷ் மொரிசியஸ் (சுதந்திரத்துக்கு முன்) கல்வி அமைச்சராக இருந்தவர்.
2. பி. கோவிந்தசாமி பிள்ளை
சிங்கப்பூர் நாட்டில் பிஜிபி என்று அறியப்பட்டவர். 1905 ல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்று சீராங்குன் தெருவில் ஒரு கடையில் வேலை பார்த்தவர்.
கடினமான உழைப்பாலும் கடன் வாங்கியும் சொந்த கடை ஆரம்பித்தவர்.
பிஜிபி ஸ்டோர்ஸ் சேலை கடை மிகவும் பிரபலமானது. நவீன சிங்கப்பூரை கட்டமைக்க உதவியவர்களில் ஒருவரான இவரை கௌரவிக்கும் விதமாக சிங்கப்பூர் அரசு 200 ஆம் ஆண்டு நினைவாக வெளியிட்ட சிறப்பு பணத்தாளில் இவரது படத்தை வைத்துள்ளது.
No comments:
Post a Comment