Friday, 10 December 2021

உடன்பிறப்பின் திருமண நாள்

 அவள் : காட்டு வேலையில் 

கரை கண்டவள்.

அவர் : போல்ட்டு வேலைகளை 

புரட்டி எடுப்பவர்.

அவள் : அதிகம் படிக்கவில்லை 

கைத்தொழில் தெரிந்தவள்.

அவர் : அதிகம் படிக்கவில்லை

தொழில்நுட்பம் தெரிந்தவர்.

அவள் : மானூரை தாண்டியதில்லை 

அதிகபட்சம் பாளையங்கோட்டையை பார்த்தவள் 

அவர் : பல ஊர்களில் பணி செய்தவர் 

ஐந்தாறு வெளிநாடு சென்றவர்.

அவள் : பேசிக்கொண்டே இருப்பவள் 

அவர் : அதிகம் பேசாதவர்.

அவள் : நெல்லும் காய்கறியும் விளையும் 

நஞ்சையில் பிறந்தவள்.

அவர் : எள்ளும் உளுந்தும் விளையும் 

புஞ்சையில் பிறந்தவர்.

அவள் : வீட்டின் இரண்டாவது 

பெண் குழந்தை.

அவர் : வீட்டின் இரண்டாவது 

ஆண் குழந்தை.

இவர்களை இணைத்தது இறைவன் அருள்!

இவர்கள் திருமணம் நடந்தது 2005 ஆண்டு

இந்த தம்பதி வாழ வேண்டும் நூறாண்டு






No comments:

Post a Comment