தற்போது தான் இந்த படம் பார்த்தேன். கண்களை கலங்க வைத்த படம்.
கண்கள் கலங்கியதற்கு காரணம் எனது கிரிக்கெட் ஆர்வம் என்பதை தாண்டி படமாக்கிய விதமும் உள்ளது. நான் பிறப்பதற்கு மூன்றாண்டு முன்னாடி நடந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் ரன்வீர் சிங், நடித்த விளம்பரங்களை பார்த்த பின், அந்த முகத்தை கண்டாலே எரிச்சல் வரும் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் கபில்தேவ் பாத்திரத்திற்கு சரியான தேர்வு. குறிப்பாக ஆங்கிலம் பேசும் காட்சிகளில் இயல்பான நடிப்பு.
கதாபாத்திரங்கள் தேர்வு தான் படத்தின் முதல் பலம். கிட்டத்தட்ட எல்லா வீரர்களின் முகத்தை ஒத்த முகங்களை தேர்வு செய்துள்ளார்.
ஜிம்பாப்வே உடனான போட்டியில் குளிப்பதற்குள்ளாக நிறைய பேர் அவுட் ஆகிறார்கள் என்ற காட்சி விளக்கம் அருமை. உலக சாதனை படைத்துவிட்டோம் என்ற விசயமே தெரியாமல் கபில் பேட்டிங் ஆடுவது தரம்.
இந்து - மூஸ்லிம் என பிரிந்திருக்கலாம், கிரிக்கெட் மூலம் இந்தியர் என இணைவர் என்ற இந்திரா காந்தியின் வியூகம்.
சீக்காவாக ஜீவா, சீக்கா கிரிக்கெட் கமெண்டரி மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் வாய் வார்த்தை மட்டும் தான் காட்டியுள்ளார் என்று விளங்குகிறது.
வெங்கசர்காரின் காயம், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் எது என்றே தெரியாத பவுலர்கள், சீனியர் கவாஸ்கர் ஆலோசனை என அந்தகால கிரிக்கெட் கண் முன்னே விரிகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கு கோப்பையை வென்ற கபில்தேவ்வின் கிரிக்கெட் பேசப்பட வேண்டிய உண்மை.
கிரிக்கெட் தாண்டி, கிரிக்கெட் வீரர்களின் உறவுகள், ரசிகர்களின் மனமாற்றம் என தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை.
மான்சிங்கின் அணுகுமுறையும் ரசிக்க வைக்கிறது.
No comments:
Post a Comment