மார்கழி பனி
Friday, 20 February 2026
காஃபி வித் கபிலர்
Wednesday, 18 February 2026
தமிழ்ப் புத்தாண்டு
Monday, 9 February 2026
மகளிர் விடியல் பேருந்து
ஊருணியில் இருந்து
தீர்த்தம் எடுத்து வந்தாச்சு.
வில்லிசை நிறுத்தப்பட்டு
மேளமும் மணியும்
ஒலிக்கிறது.
சாமி அருள் யாருக்கும்
வரவில்லை.
மேளத்தின் வேகத்தைக்
கூட்டச் சொல்கிறார்
ஊர் பெருசு.
ஊருணி கரையில்
வேலை செய்யும்
ஜேசிபியை வேடிக்கை
பார்ததபடி இருக்கிறார்
காவல் தெய்வம்!!!
****
வேலைக்கு செல்லும்
ஜெயந்தி வேக வேகமாக
கிளம்பினாள்.
பேருந்து நிறுத்தத்தை
நெருங்கும் முன்
பேருந்து நகரத்
தொடங்கிவிட்டது.
கை காட்டினாள்,
அடுத்த பேருந்தில்
வரச்சொல்லி
அடுத்த கியரை
மாற்றினார் ஓட்டுனர்.
பேருந்தின் முகப்பில்
மகளிர் விடியல்
பேருந்து!!!
****
ஊருக்கு வெளியே
பரந்த இடத்தில் உள்ளது
கால்நடை மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி மையம்.
நிறைய ஆய்வுகள்
நடக்கின்றது.
ஆனாலும் ஊருக்குள்
இருக்கும் அரசு
மருத்துவமனையில்
மார்கழியை கொண்டாடுகின்றன
தெருநாய்கள்!!!
****
மாநாட்டிற்கு தலைவர்
வருவதால் சாலையில்
வேகத் தடைகள் இல்லை.
தலைவரைப் பார்க்க
வேகமாகச் சென்றான்
தொண்டன்.
வழியில் கட்டியிருந்த
வாழை மரத்தைப் பார்த்து
வந்தது மாடு.
தாமதமாக வந்த
தலைவருக்கு இரங்கல்
சொல்ல நேரமில்லை!!!
Thursday, 29 January 2026
கடவுள்களின் சந்திப்பு
ரேசனில் மூன்று நேரம்
நின்று பெற்ற மூவாயிரத்தோடு
முருகனைப் பார்கக வந்த
பக்தன் ஆறு மணி நேரம்
வரிசையில் நின்று
வேண்டுதலை வைத்தான்.
முன் இரவில் அந்த பக்தனை
பார்க்க ஆசைப்பட்டு
முருகர் கிளம்பினார்.
தெருவில் நுழையும்போதே
நாய்கள் சுற்றி விட
வேலன் வேலை எடுத்தார்.
பழுதடைந்த சாலையில்
பயணித்து களைப்பான
மயிலோடு சாலையோரம்
ஓய்வெடுத்தார்.
கால்வாய் ஓரத்தில்
கஞ்சா போதையில்
இருந்த ஒருவன்
கல்லெறிய மயில் பறக்க
காயமின்றி தப்பினார்
கந்தன்.
பக்தன் வீட்டினுள் சென்ற
போது ஆழந்த நித்திரையில்
இருந்தான் பக்தன்.
ஆறு மணி நேர காத்திருப்பு
தந்த அசதி என
நினைத்தார் சுப்பிரமணியன்.
பக்தனிடம் இருந்து வந்த
மது வாசனை கந்தனை
காயப்படுத்தியது.
வந்தது வந்தோம் வள்ளிக்கு
நகை வாங்கி செல்வோம்
எனநகைக்கடைக்கு சென்றார்
மயில் வாகனன்.
தங்கம் விலையை பார்த்து
மயங்கி சரிந்தார் வடிவேலன்.
கடை வளாகத்தில் இருந்த
கணேசரை அழைத்து வந்தது
மயில்.
டேய் தம்பி என்னாச்சு
என ஓடி வந்தார் கணேசன்.
மயிலிடம் 10 ரூபாயை
கொடுத்து தண்ணீர் பாட்டில்
வாங்கி வரச் சொன்னார்
விநாயகன்.
பாட்டிலுக்கு பத்து ரூபாயா?
என்றார் அரை மயக்கத்தில்
முருகன்.
டேய் தம்பி இது தண்ணி பாட்டில் டா
என்று பதிலுரைத்தார்
யானை முகத்தான்.
ஜிஎஸ்டி குறைஞ்சதுல
தண்ணீர் பாட்டில் விலை
குறையவில்லையா?
மீண்டும் முருகன்.
அதற்காக 2 சொட்டு தண்ணீர்
அதிகமாகிட்டாங்க தம்பி.
தம்பி கண் விழித்ததும்
சகோதரர்கள் இருவரும்
நண்பர் இயேசுவை பார்க்க
கிளம்பினர்.
மாப்ளே, இயேசு என்று
கதவை தட்ட, உள்ளேயிருந்த
இயேசு, டேய் போதை ஆசாமிகளா
இது சர்ச், பிளாக்ல சரக்கு
கிடைக்கிற கடை
கடைசில இருக்கு என்றார்.
மீண்டும் கதவு தட்ட
எழுந்து வந்து கதவை திறந்தார்
இயேசு.
என்னய்யா இவ்வளவு
சீக்கிரமே தூக்கம் என்றார் முருகன்.
தைப்பூசம் வருவதில்லை
என்றார் இயேசு.
தைப்பூசத்துக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்?
அதான் மாப்ள எனக்கும்
தெரியலை ஆனால்
முழு இரவு ஜெபம்
ஏற்பாடு பண்ணி இருக்கானுக.
இருவரும் சிரிக்க
நீங்க ஜாலியா இருக்கீங்க
அப்படி தானே.
யோவ் நீ வேற நண்பா
முதற்கடவுள்னு தான் பேரு
கடைசியா தான் வந்தார்
விநாயக்னு கலாய்கிறானுக
என்றார் பிள்ளையார்
பரிதாபமாக.
மூவரும் சேர்ந்து
அடுத்த நண்பர் அல்லாவை
பார்க்க சென்றனர்.
அல்லா மாம்ஸ், அல்லா மாம்ஸ்
என்று கதவை தட்ட
அல்லா எழவில்லை.
மாம்ஸ வெடி வச்சு
தான் எழுப்பனும் போல
என்று இயேசு சொல்ல
பதறி எழுந்தார் அல்லா.
என்ன மாம்ஸ் இவ்வளவு
பதட்டம் என பிள்ளையார் கேட்க
எளவு வீட்டுல வெடி வச்சா கூட
என் பேர்ல தான் எழுதுறாங்க
என்றார் அல்லா.
மற்ற மூவரும் சிரிக்க
முருகன் சொன்னார்
இன்னைய தேதில அல்லா மாம்ஸ்
தான் மாஸ் என்று.
ஆமா, தேர்தல் வருது
வாங்கு வங்கி இருக்கு
புகழ் மாலை தான் அல்லாவுக்கு
என்றார் பிள்ளையார்.
அது தான் எனக்கும் பயம்
தேர்தல் முடிஞ்சா
என்னய தெருவுல
விட்டுருவாங்க மாப்ள
என்றார் அல்லா.
நால்வரும் சிரித்து
நகர்ந்தனர்.
Thursday, 1 January 2026
மறு சந்திப்பு
துள்ளுவதோ இளமை பட கிளைமேக்ஸில் தனுஷ் சொல்லுவாரே, என்னைக்காவது நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணுவோம். அப்போ நடந்ததை எல்லாம் பேசி சிரிக்குவோம் என்று.
எங்களின் பள்ளி காலமும் அப்படி தான் முடிந்தது. செல்போன்கள் முளைத்திரா காலம், கடிதம் மூலமே தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை.
பத்தாம் வகுப்பில் என்னோடு நெருக்கமாக இருந்தது. சதீஷ்குமார், விஜயகுமார், ராதாகிருஷ்ணன் & சுரேஷ். இதில் சுரேஷ் எங்கள் பள்ளியில் தான் தொடர்ந்து படித்தான். விஜயகுமாருக்கு மானூர் தான். அவன் மாறி போனதும் பக்கத்தில் இருந்த சேவியர் பள்ளி தான். வடலிவிளை ராதா நாங்கள் +1 படித்த போது 10வது தான் படித்தான். அதற்கு பிறகு தான் சென்றுவிட்டான்.
சதீஷ்குமாரின் ஊர் கீழ ஆம்பூர். அவனை விடுதியில் எல்லாரும் ஐயர் என்றே அழைப்பார்கள். ஆனால் அவன் ஐயர் சாதி கிடையாது. அவன் மீது கிட்டத்தட்ட எல்லாருமே வன்மத்தை கொட்டுவார்கள். பத்தாம் வகுப்பில் நான் விடுதியில் சேர்ந்த பிறகு என்னோடு அவன் நெருக்கமானான். என்னோடு தான் எல்லாவற்றையும் பகிர்வான். நான் கூட அவனுக்கு தவறிழைத்தேன்.
அவன் காதலி (அன்றைய நாள்) பெயரை தமிழன் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்ததால் தமிழனிடம் சொன்னேன். தமிழன், சத்தியத்தை சாம்பார் சாதமாக தின்று ஏப்பம் விட்டு எல்லோரிடமும் சொல்லி விட்டான். அந்த வகையில்சதீஷ்க்கு என் மேல் கோபமே, ஆனாலும் எங்கள் நட்பு சிதையவில்லை.
சதீஷ், தீனா படத்தை வரி வரியாக விளக்கி விவரித்த தொனியில் தான் நான் இன்றும் அஜித் ரசிகன். சதீஷ், வெள்ளி மலரே பாட்டை நன்றாக பாடுவான், எனக்கும் எழுதித் தந்து பாட வைத்தான்.
பத்தாம் வகுப்பிற்குப் பிறகு வேறு பள்ளி சென்றுவிட்ட சதீஷை, கல்லூரி சென்ற பிறகு கெட்வெல் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் செம்மீன் ஹோட்டல் அருகில் சந்தித்தேன். ஏதோ கொரியர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னான். கல்லூரி விடுதி தொடர்பு எண்ணை கொடுத்தேன். அவனை தொடர்பு கொள்ள எண் இல்லை. ஒருமுறை போன் செய்து பேசினான். அதற்குப் பிறகு நினைவில் மட்டும் இருக்கிறான், தொடர்பில் இல்லை.
பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நிறைய பேர் பர்ஸ்ட் க்ரூப் எடுத்ததால் அனைவரும் ஒரே வகுப்பு. அது போக வேறு வகுப்பில் படித்த சங்கர், செல்வின், இன்பராஜ், லட்சுமணன், வரதராஜ் இன்னும் பலருடன் நட்பு உண்டு.
மகேந்திர சிங் (பின்னாளில் தோனி பெயரும், தோனியும் எனது மனதுக்கு நெருக்கமாக காரணமானவன்) டோனாவூரில் இருந்து வந்தவன், இவனும் கம்யூட்டர் சயின்ஸ் என்பதால் நெருக்கம். பதினொன்றாம் வகுப்பில் நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே தான் இருந்தோம். பன்னிரண்டாம் வகுப்பில் மாறிவிட்டான். நான், மகேந்திர சிங், பிரசாத் மூவரும் சேர்ந்து தான் கம்யூட்டர் டியூசன் செல்வோம்.
மகேந்திர சிங், 12வது விடுமுறையில் அவனது அப்பா வசிக்கும் மும்பைக்கு செல்வதாக சொன்னான். மும்பை போனானா என்ன ஆனான் என்று தெரியவில்லை. பிரசாத்துக்கு சங்கரன்கோவில், அவனது பத்தாவது மார்க் ஷீட் தொலைந்து விட எங்க ஊருக்கு (இன்று வரை கூகுள் மேப்பில் அப்டேட் ஆகாத ஊர்) விசாரித்து வந்தவன். ஆனால் பத்தாம் வகுப்பில் அவன் எனது செக்சனே கிடையாது. சென்னைக்கு வந்த பிறகு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் சந்தித்தேன். வழுக்கை தலையோடு நின்றிருந்தவன் பிரசாத் தானா என்று அடையாளம் காணவே வெகு நேரம் தேவைப்பட்டது.
பதினாறாம் வகுப்பில் நெருங்கிய நண்பன் வேல்முருகன். வேல் முருகனுக்கு எங்க ஊர் பக்கத்து ஊர் இத்திகுளம் தான். குடும்ப பிரச்சினையல் சிக்கி அவன் பன்னிரண்டாம் வகுப்பு சரியான முறையில் படிக்கவில்லை. ஒருமுறை மதுரை செல்லும் பஸ்ஸில் அவன் ஏறினான். அவன் மும்பையில் ஹோட்டல் நடத்துவதாக கேள்வி பட்டிருந்தேன். அப்போது பேசும் போது பாஸ்ட் புட் கடை வைத்திருப்பதாக சொன்னான். அவன் செல்போன் எண் தொலைந்துவிட்டது. அவனும் தொடர்பு எல்லையில் இல்லை. அவனது புகைப்படம் எனது பர்ஸில் இன்னும் இருக்கிறது.
மருத்துவராகிவிட்ட மகாராஜன் ஆரம்பித்த வாட்சப் குழுவில் இன்பா, லெட்சு, எஸ் எஸ், பிரேம், கிங்ஸ்லி என பலரும் இணைந்துவிட்டனர். மருத்துவர் தான் கோபப்பட்டு சென்றுவிட்டார். எங்களின் அதிக கிண்டலுக்கு ஆளான தொழுதூர் பாலசுப்பிரமணியம் இப்போது பல் மருத்துவர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, எஸ் எஸ் முருகன் போன் பண்ணினான். என்ன பேசவானோ என்று நினைத்த போதே மாப்ள எப்படி இருக்க என்று கேட்டு பால்யத்தின் நினைவுகளுக்கு அழைத்து சென்றான்.
வேலை கிடைத்து சென்னை சென்ற பிறகு, திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டில் டேய் பழனி என்ற குரல் திரும்பி பார்த்தால் பிளசிங். 12வது முடித்த பிறகு கடிதம் எழுதி இருந்தான். சில பிரச்சனைகள் காரணமாக வேறு இடத்திற்கு குடும்பத்தோடு செல்வதாக எழுதி இருந்தான். அதற்கு பிறகு புது பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு. அவன் மெடிக்கல் ரெப் ஆகி விட்டதால் மருத்துவம் குறித்து சந்தேகத்திற்கு போன் பேசிக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் தோறும் கேக் வந்து தந்து செல்கிறான்.
வளசரவாக்கத்தில் வழக்கமான சேட்டு கடையில் பொருள் வாங்கும் போது பழனி என்ற குரல், யார்னு தெரியுதா என்றான். எனக்கு தெரியல. டேய் நான் சங்கர் என்றான், அப்போதும் தெரியவில்லை. விடுதியில் 5ம் அறையில் இருந்தவர்களின் அவனும் ஒருவன். சங்கன் என்று நாங்கள் அழைக்கும் சங்கர், அந்த சங்கர் முகத்தை இந்த சால்ட் அன்ட் பெப்பர் முகத்தோடு இணைத்து ஒரு வழியாக அடையாள படுத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு வளசரவாக்கம் வீதிகளில் சாரம் கட்டி திரியும் இன்னொரு நபராக அடையாளத்தில் இருந்தான் சங்கர்.
வரதராஜ், பள்ளியில் படிக்கும் போது சொன்னது போல இப்போது பக்தி மணம் கமழும் பாதிரியார் ஆகிவிட்டான். பன்னீர்செல்வம், ஜெயக்குமார், ஜேம்ஸ், செல்வின் குறித்து தகவல்கள் இல்லை. எங்கள் வகுப்பில் நன்றாக விசில் அடிக்க தெரிந்த பூவாணி ராஜாமணி பற்றியும் தெரியவில்லை.
என்றாவது ஒருநாள் சந்திப்போம்.


