Wednesday, 26 November 2025

நாட்டு நடப்பு

மோசமாக இருந்த
நகரச் சாலைகள் மழையால்
படுமோசமாகிவிட்டது! 

சென்டர் பீஸு கொடி ஏற்றுகிறது
இங்கே பெரிய பீஸு
பிறந்த நாள் வாழ்த்து
சின்ன பீஸு
ரௌடி டைம்! 

பழைய பீஸுக்கு 
பஸ் ஏறினா தான்
உயிர் வரும்! 

புதுசா வந்த காமெடி பீஸ்
இரண்டு பக்க
அறிக்கையில்!

மக்கள் துயரம் 
தொடருகிறது!!! 

Monday, 17 November 2025

மழை

மழை காட்டிய மாந்தர்கள்

அவர்கள் வீட்டில் தண்ணீர்

புகுந்த நிலையில்

நடுராத்திரியில் கருப்பு

தேனீர் தயாரித்த

தந்த வீட்டு உரிமையாளர்

நல்ல மனத்தை காட்டியது

மழை! 

புன்னகைக்க மறுத்து

செல்லும் பக்கத்து

வீட்டுகாரனின் குரலை

காட்டியது மழை! 

தினமும் பால் வாங்கினாலும்

இன்று கூடுதல் விலை

என்று கூறிய அண்ணாச்சியின்

வியாபார தந்திரத்தை

காட்டியது மழை! 

****

மழை நாட்கள்

அக்காவின் திருமணத்தன்று

கொட்டித்தீர்த்ததொரு மழை! 

அலுவலகம் முடிந்து

வரும் போது காலணியையும்

காலுறையையும் காலி

செய்ததொரு மழை! 

புயல் கரையை

கடக்கும் காட்சிகளை

காட்டியதொரு மழை! 

மகளின் பிறந்தநாளுக்கு

அணிச்சல் வாங்க

அலைய விட்டதொரு மழை!!! 

****



தேவைகள்

தூறல் ஆரம்பித்தால்

பால், மாவு, மெழுகுவர்த்தி

பிஸ்கட், ரவை வாங்கி

வைக்க வேண்டும்!

வாகனத்தை உயரமான

இடத்தில் நிறுத்த வேண்டும்!

அலுவலக நண்பர்களிடம்

அவர்களின் பகுதியில்

மழை நிலவரம்

கேட்க வேண்டும்!

தண்ணீர் தொட்டியை

நிரப்ப வேண்டும்!

கடையை மூடும் முன்

வாங்கி வைக்க வேண்டும்!!! 

****

மழை அறிகுறி

தாத்தா சொல்வார்

நிலவைச் சுற்றி கோட்டை

கட்டியுள்ளது மழை வரும் என்று!

அம்மா சொல்லாங்க

ஈசானி மூலையில்

மின்னல் வெட்டுகிறது

மழை வரும் என்று!

மகள் சொல்கிறாள்

அரசின் ஆரஞ்ச் அலர்ட்

மழை வரும் என்று!!! 

****

மாமழை 

பள்ளி காலத்தில்

மின் துண்டிப்பு 

செய்து நாள் முழுக்க

பொழிந்தது மாமழை!

வீட்டை சுற்றிலும்

தவளைகளின் குரலோசை!

வீட்டிற்கு மேற்கில்

இருக்கும் வேப்பமரம்

எப்போது வேண்டுமானாலும்

விழலாம் என்பது

அம்மாவின் பயம்!

மறுநாள் செந்நிறத்தில்

நுரையோடு சென்றது

சிற்றாறு!

வீட்டு மாடியில் இருந்தே

பார்த்தேன் 

தேவையான மணலை

வழங்கிவிட்டு தடமற்று

கிடக்கிறது சிற்றாறு!!! 

****

நிவாரணம்

நாள் முழுக்க பெய்த

மழை மேட்டுப் பகுதியை

எதுவும் செய்யவில்லை!

ஆற்றை நம்பி கரையோரம்

இருப்பவர்களின்

ஆடு, மாடுகளுக்கு

கடலை காட்டியது ஆறு!

மேட்டு குடியினரும்

கூச்சமில்லாமல் பெற்றுக்

கொண்டனர்

நிவாரணத் தொகை!!! 

****

ரசிப்பு

இளையராஜா பாடல்கள்!

ஒரு கோப்பை தேநீர்!

ஆடையோடு நனைதல்!

கொட்டும் அதன் புகைப்படமென

மழையை ரசிக்கலாம்!

மழை தரும் கோரங்களை

காணாமல் இருக்கும் வரை!!! 










Saturday, 20 September 2025

தகவல் சரிபார்ப்பு

பாதாள சாக்கடை

சாலை நடுவே குழி தோண்டி
பாதாள சாக்கடை பணி
நடைபெறுகிறது. 
குழியை மூடிய பிறகு
சாலையை காணவில்லை!!! 

நடைபயிற்சி

நாளொன்றுக்கு நான்கு
கிலோமீட்டர் நடந்தால்
உடல் நலமாக இருக்கும்
என்றார் மருத்துவர். 
இரண்டு கிலோ மீட்டர்
நடக்கும் போதே இருபது
நாய்கள் தெருவில்
உடல்நலமா?
உயிர் நலமா? 

பேருந்து

மகளிர் இலவச பயணம்
என்ற எழுத்துகள் தெரிந்தது. 
எந்த வழி என்று தெரியவில்லை. 
நடத்துனரிடம் கேட்டால்
எரிந்து விழுந்தார். 
அடுத்த பேருந்துக்கு
காத்திருக்கிறாள்
வடை விற்கும் பாட்டி!!! 

தாமதம்

பிரச்சாரத்துக்கு தலைவர்
வருவதால் பேருந்து சுற்றிக்
கொண்டு சென்றது. 
மருத்துவமனையை
அடையும் முன்பே
மருத்துவர்
நேர் வழியில்
கிளம்பிவிட்டார்!!! 

புகைப்படம்

தலைவன் போடும்
ஒவ்வொரு படத்திற்கும்
காரணம் கண்டறிந்து
எழுதினான் மானசீக
தொண்டன்! 
தலைவலியும் காயச்சலும்
தலைவனுக்கு வராது!!! 

கணக்கெழுதுதல்

குளத்தை தூர் வாரியதாக
எழுதப்பட்டது
குள்ளத்தங்கரை ஆலமர
நிழலில் அமர்ந்து
நூறு நாள் வேலை செய்தார்கள்! 
அவர்களுக்கு நீரழிவு
நோய் இரத்த சோதனை
செய்து வீடு தேடி
மருத்துவ திட்டம்
எழுதப்பட்டது. 


தகவல் சரிபார்ப்பு

தகவல் சரிபார்ப்பு
மையங்கள் விரைந்து
செயல்பட்டன. 
கொலை நடந்த
பத்தே நிமிடத்தில்
கொலையானவன், 
கொலை செய்தவன்
சாதிகளை 
தெரிந்து சொன்னது!!! 

வீட்டில் இருந்து வேலை

முதல் நாளிலே
முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு
அழைத்து லோன் தேவை
இருக்கிறதா என்றாள். 
2ம் நாளில் அவளது
அழைப்புகள் போலியானவை
என்றது அலைபேசி
நிறுவனம். 
அவளும் முழு கட்டணம்
செலுத்தி தான்
அலைபேசி சேவையை
பயன்படுத்துகிறாள்!!! 


Saturday, 13 September 2025

தியேட்டரைத் தேடி

 திருநெல்வேலியில் கண்டுபிடிக்க கடினமான தியேட்டர்கள் என்றால் பேரின்பவிலாஸ், அருணகிரி மற்றும் சிவசக்தி மட்டுமே. ரத்னா & பார்வதி, சென்ட்ரல், ராயல், ராம் & கலைவாணி என்று பேருந்து நிறுத்தங்கள் உண்டு. 

நாங்கள் நாகர்கோவில் சென்ற போது நாகர்கோவிலில் மூன்று தியேட்டர்கள் மட்டுமே உருப்படி. ராஜேஷ் வடசேரி பஸ் ஸ்டாண்ட் அருகில். கார்த்திகை இதுவும் அதற்கு அருகில். ஒரே காம்ப்ளக்ஸில் சக்ரவர்த்தி & மினி சக்ரவர்த்தி இவை தான். 



தங்கம் தியேட்டர் படு மோசமாக இருக்கும். யுவராஜ் பழைய படங்கள் தியேட்டர். பயோனியர் வசந்தம் பேலஸ் அப்போது மூடி இருந்தார்கள். 

முதல் முறையாக படத்துக்கு போனது ராஜேஷ் தியேட்டரில் திருடா திருடி பார்த்தோம். அதை முடித்து விட்டு சக்ரவர்த்தியில் பாய்ஸ் பார்க்க நினைத்தோம். 

வடசேரி பேருந்து நிலையத்தில் நிறைய பேருக்கு சக்ரவர்த்தி தியேட்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கண்டக்டர்களிடம் கேட்டால் மீனாட்சி புரம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என்று மட்டுமே சொன்னார்கள். 

ஒருத்தர் மட்டுமே செட்டிகுளம் ஜங்ஷனில் தியேட்டர் இருப்பதாக சொன்னார். (திருநெல்வேலியில் சொல்லப்படும் விலக்கு தான் நாகர்கோவிலில் ஜங்ஷன் என்பது பின்னாளில் தெரிந்தது). ஒரு வழியாக வடசேரியில் இருந்து பார்வதிபுரம் - பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் போய் படம் பார்த்தோம். 

அடுத்த முறை போகும் போது தக்கலை முத்தமிழ் தியேட்டரில் காக்க காக்க என்று போஸ்டர் பார்த்தோம். ராஜேஷ் தியேட்டரில் பிதாமகன் பார்த்துவிட்டு தக்கலை வந்தோம். தியேட்டரை விசாரித்து போன போது உயிரின் உயிரே பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. ஏழு பேரில் முன்னால் ஓடிய செல்வநாதன் படம் ஆரம்பிச்சுட்டான் என்றான். கவுண்டரில் போய் செல்வநாதன் கேட்டு, பர்ஸ்ட் க்ளாஸ் தான் இருக்கான் என்றான். எல்லாரும் பாக்கெட்டை துழாவ "மச்சி டிக்கெட் 7 ரூபாய்யாம் நானே எல்லாருக்கும் எடுத்துருறேன் என்றான் செல்வா".

உள்ள போய் உட்கார்ந்தால் சாய்வதற்கு வசதியாக இருந்த மர பெஞ்ச் நன்றாக இருந்தது. ஆனால் ஜோதிகா குரல் ஆண் குரலில் இருந்தது. பிறகு தான் தெரிந்தது தியேட்டர் ஸ்பீக்கரில் பாட்டு மட்டுமே நன்றாக கேட்கும் என்று. வசனமாடா முக்கியம் போன்ற படங்களுக்கு ஏற்ற தியேட்டர். வாரத்தில் இரண்டு நாட்கள் வசனம் முக்கியமில்லா படங்கள் ஓடும் தியேட்டர் என்பது பின்னாளில் தெரிந்தது. 

குழித்துறை லட்சுமி தியேட்டர் பஸ் ஸ்டாப் பக்கத்தில் தான். அங்கே ஆட்டோகிராப் படத்திற்கு முதல் முறையாக போன போது பர்ஸ்ட் கிளாஸ் 12 ரூபாய் என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. குறைந்த கட்டணத்தில் படம் பார்க்க நல்ல தியேட்டர் குழித்துறை லட்சுமி. மார்த்தாண்டம் ஆனந்தும். 



அதனால் எங்களது முதல் தேர்வு மார்த்தாண்டம் மற்றும் குழித்துறையே. வரலாறு படம் பார்க்க அதையும் தாண்டி களியக்காவிளை ரிச்சு தம்மின்ஸ் சென்றோம். தீபன் ஏற்கனவே போனதால் வழி காட்டி அவன் தான். 

போபாலுக்குஇண்டர்வியூக்கு போகும் போது காலையிலே சென்னை வந்துவிட்டோம் நானும் முத்து சங்கரும். இரவு 12 மணிக்கு அடுத்த ரயில், பகலில் இரண்டு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது சென்னையில் எங்களுக்கு தெரிந்த இடம் அயனாவரம் மட்டுமே. அபிராமியில் ஒரு படம் பார்த்துவிட்டு அயனாவரம் ராதா தியேட்டரை தேடி அலைந்து அடுத்த படம் பார்த்தோம். 

வேளச்சேரியில் பக்கத்து ரூம் வக்கீல் முருகனோடு அலைந்து கண்டுகொண்டது ஆலந்தூர் எஸ்கே தியேட்டர். பக்கத்து ரூம் கார்த்தி பில்லா முதல் காட்சிக்கு கூட்டிச் சென்றது ரெட்ஹில்ஸ் லட்சுமி தியேட்டருக்கு. 

சென்னையில் தியேட்டர் கண்டுபிடிப்பது அதற்கு எந்த பஸ் போகும் என்று கண்டுபிடிப்பதில் சன்குமார் கில்லி. அடையார் கணபதி ராம் தியேட்டருக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் கூட்டி சென்றவன் அவனே. 

சத்யம் தியேட்டரில் டிக்கெட் எடுப்பது குதிரை கொம்பு என்பதால் உட்லண்ட்ஸ் தியேட்டரில் பில்லா போனோம். படம் முடிந்து வரும் போது தி. நகரில் சன் குமாருக்கு ஒரு அவசர அலுவல் இருந்ததால் உட்லண்ட்ஸ் தியேட்டர் எதிரில் தி. நகர் பஸ் ஏறினோம். அது திருவல்லிக்கேணி போகும் பஸ் என்பதால் இறக்கி விடப்பட்டோம்.  சென்னையில் வழி மாறுவது இரண்டாவது முறை. 







Friday, 12 September 2025

பெசன்ட் நகர் | 5E | வடபழனி

சந்தானம் காமெடியில் 5ஈ வருமா என்று ஒருவர் கேட்பாரே. அந்த 5ஈ பேருந்தைப் பற்றிய பதிவு தான் இது.
பெசன்ட் நகரில் இருந்து வடபழனி செல்லும் நகரப் பேருந்து. ஆனால் இதன் பயண தடம் நிறைய இடங்களை தொட்டு செல்லும்.

பெசன்ட் நகரில் ஆரம்பித்தால் வண்ணாந்துறை, அடையார் டிப்போ, அடையார், மத்திய கைலாஷ் என பயணிக்கும். சென்னையின் முக்கிய சிக்னல் மத்திய கைலாஷை கடந்து அண்ணா பல்கலைக்கழகம், ராஜ் பவன் கடந்து அண்ணா சாலையில் இணைந்து கொள்ளும்.

சின்னமலை, சைதாப்பேட்டை கடந்து தி.நகர் செல்லும் சாலையில் பயணிக்கும் தி.நகர் செல்லுமா என்று நினைத்தால் அப்படியே இடது பக்கம் திருப்பி கண்ணம்மா பேட்டை, சிஐடி நகர் வழியாக பயணிக்கும்.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தண்டவாளத்தை தாண்டி, ஸ்ரீனிவாசா தியேட்டர், மேட்டுப்பாளையம் வழியாக அசோக் நகர் வந்தடையும். உதயம் தியேட்டர் வந்ததும் அடுத்து வடபழனி தான் என்று நினைத்தால் இடது புறம் திரும்பி கேகே நகர், எம்ஜிஆர் நகர் சென்று சிவன் பூங்காவின் இருபுறமும் சுற்றி லட்சுமன் சுருதி சிக்னலில் நெடுஞ்சாலையில் இணைந்து வடபழனி பேருந்து நிலையத்தை அடையும். 

இந்தப் பேருந்தை பொறுத்தவரை சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி, ஏழைகள் வாழும் பகுதி இரண்டையும் கணிசமாக கடக்கும் பேருந்து. 5ஈ பேருந்துகளில் தாழ்தள சொகுசுப் பேருந்து கிடையாது. எல்லாமே சாதாரண கட்டணப் பேருந்துகள். 



பெசன்ட் நகரில் இருந்து யாராவது வடபழனி செல்ல இந்தப் பேருந்தை பயன்படுத்துவார்களா என்றால் நிச்சயம் இருக்காது. 


Thursday, 11 September 2025

இயந்திர பொறியாளர்கள் [2003 - 2007]

1. அபு தாகீர்

2. அஜூ

3. ஆண்டனி போஸ்கோ நெல்சன்

4. ஆண்டனி பிராவின்

5. அர்ஜூன் வேணுகோபால் 

6. அருண்

7. பிராட்லி பிரைட்

8. செல்லத்துரை

9. டேனியல் விவின்ராஜ் ஆம்புரோஸ்



10. டேனியல் வெஸ்லி

11. தர்மேந்திரன்

12. கணபதி

13. ஜானகிராமன்

14. ஜெகன் ப்ரீஸ்

15. ஜென்னர் வி ராயன்

16. ஜெரின் ஜான்

17. ஜிம் மார்வின்

18. ஜான்ராய்

19. கார்த்திகேயன்

20. குலாம் முகமது இர்ஷாத்

21. மனோஜ்

22. முகமது கௌதுல் ஆலம்

23. முத்து சங்கர்

24. நந்தக்குமார்

25. நவீன் அனந்தகிருஷ்ணன்

26. பழனி செல்வகுமார்



27. பாண்டிராஜ்

28. பிரதீப்

29. பிரஜீஸ்

30. பிரகாஷ்

31. ராகுல்

32. ராஜா

33. ராமநாதன்

34. ரூபேஸ் தாஸ்

35. சாம் கோபிராஜ்

36. சங்கர் ராஜா

37. சந்தோஷ்குமார்

38. செல்வகுமார்

39. செல்வகுமார்

40. செல்வநாதன்

41. சாகுல் ஹமீது

42. ஷங்கர் குமார்

43. ஷிபு

44. சன்குமார்

45. ஷியாம்

46. சிவக்குமார்

47. சொர்ணவேல்

48. ஸ்ரீனிவாசன்

49. ஸ்டன் லூமன் தாஸ்

50. சுஜித்

51. சுல்தான் சையது இப்ராஹீம்

52. சுமியோ ஆனந்த்

53. தருண்

54. வேலப்பன்

55. வெங்கடேஷ் குமார்

56. வெங்கடேஷ்

57. வெங்கடேஷ்

58. விஜய் ஆனந்த்

59. விஜய சேகர்

60. விஷ்ணு

61. சாம்சன் பால்

62. ரவிநாத்

63. பிரபு

64. மிலன்

65. பிரகாஷ்

66. மரிய பிரான்சிஸ் ஜெய்வின்

67. ஸ்டாலின் ஜோஸ்

Sunday, 31 August 2025

ககக -6

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் என்ற தகவலை கேட்டதும் கபில் சர்மா மகிழ்ச்சி அடைந்தார். பல்விந்தர் சிங்கிடம் பேசினார். பல்விந்தர் சிங் ஒரு எச்சரிக்கை விடுத்தார், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கலவரங்கள் மீண்டும் வரும் சூழல் உள்ளது கவனமாக இருக்கவும் என்று.

திருநெல்வேலிக்கு வந்த மூன்றாம் நாளே பாளையநல்லூர் கிராமத்தில் அரிவாள் வெட்டு என்ற செய்தி உதவியாளர் மூலம் கபில்சர்மாவுக்கு வந்தது. சார், நாம அரசு மருத்துவமனைக்கு போய் வெட்டுப்பட்டவரை பார்க்க போறோமா எனறார் உதவியாளர். புரோட்டாகால்படி அரசியல்வாதி போகும் போது கூட போவோம் என்றார். 

கலெக்டர் அலுவலக இளம் உதவியாளர் ஒருவரை அழைத்து, எனக்கு இந்த பாளைய நல்லூர் கிராமம் எப்படிஇருந்துச்சுனு முழு வரலாறு வேணும். இரண்டு நாளில் ரெடி பண்ணுங்க. இந்த இரண்டு நாள் நீங்க வேற வேலை பார்க்க வேண்டாம் என்றார் கபில். 

அடுத்த நாள் மாலையே அலுவலக உதவியாளர் வந்தார். விளக்கி சொல்ல ஆரம்பித்தார். சார், சுதந்திரம் அடைஞ்ச டைம்ல அங்க ஒரு பெரிய குளம் இருந்திருக்கு. அப்புறம் அந்த குளத்தை தனியார் கல் குவாரியா மாத்தி, புது குளம் தோண்டி கொடுத்து இருக்காங்க. அந்த பகுதியில் இருந்தவங்க கல் குவாரியில் வேலை பார்த்து இருக்காங்க. 

அப்புறமா கவர்மென்ட் ஒரு சாராருக்கு வீடு கட்டி கொடுத்து இருக்காங்க. அது வடக்கு பக்கமா, அதுக்கு அப்புறம் அந்த ஊர் தெக்கூர், வடக்கூர்னு வேற ஜாதியினர் ஊரா மாறி இருக்கு. 

சமீபத்தில் கல் குவாரியில் போதுமான அளவு கல் இல்லாததால் அந்த தனியார் கம்பெனி அதை மூடிட்டாங்க. இப்போ அந்த ஊர்காரங்களுக்கு வேலை இல்லை. 

ஒரு வண்டி மட்டுமே போகக்கூடிய சின்ன பாலத்தில் இரண்டு பிரிவினர் டிராக்டர்கள் எதிர் எதிரே வர யார் வழிவிட வேண்டும் என்பது சண்டையாகி வெட்டு குத்து வரை போய் இருக்கு சார் என்றார் உதவியாளர். 

கபில் சர்மா நாளைக்கு நான் பாளையநல்லூர் போறேன் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க என்றார் உதவியாளரிடம். 

கபில் பாளையநல்லூர் சென்று ரெண்டு பகுதிக்கும் நடுவில் இருந்த சின்ன கோவிலில் வண்டியை நிறுத்தினார். மரியாதையுடன் வெறும் காலோடு  சென்றார். கலெக்டர் வருவது யாருக்கும் தெரியாததால் பெரிய பரபரப்பு இல்லை. 

ஒரு பாட்டி மட்டுமே அங்கே இருந்தார். கபில் இந்த சாமி பேர் என்ன என்று பாட்டியிடம் கேட்டார். இவர் கசமாடன், அது அம்மன், அவரு காவல் மாடன். அந்த சாமி மட்டுமே ஏன் தனியா தள்ளி இருக்கார் என்று கேட்டார் கபில். 

அவர் வண்ணார் சாதி தம்பி என்றார் பாட்டி. சாமியிலும் சாதியா என்று நினைத்து கொண்டார் கபில். பாட்டி இங்க உங்களுக்கு இருக்கிற பிரச்சினை என்ன என்று கேட்டார். எங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடா இருக்கு. தண்ணி ஏற்பாடு பண்ணுங்க தம்பி என்றார் பாட்டி. 

ஊர்காரர்கள் வந்துவிட்டனர். கல் குவாரியில் வேலை போனவர்களுக்கு, மில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார் கபில். பாலத்தில் மேற்கில் இருந்து வரும் வாகனம் விலகி வழிவிட வேண்டும் என்றும் கூறினார். 

குடிநீர் பிரச்சினை பற்றியும் பேசினார்கள். பாளையநல்லூரில் பாறைகள் அதிகம் என்பதால் ஆழ்துளை கிணறு அமைப்பதிலும் சிக்கல் என்றனர். ஊர் பெருசு ஒருவர் முன்வந்து கசமாடன் கண் எதிரே இருக்கும் இடத்தில் நல்ல ஊற்று இருக்கும் என்றும் ஆழ்துளை கிணறு அமைக்க கசமாடன் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறினார். 

கபில் அவரிடம் ஊற்று இருக்கானு பார்ப்போம். இருந்தால் கசமாடனுக்கு என்ன பரிகாரமோ அதை செய்து போர் போடலாம் என்றார். ஊரும் சரி என்றது. அன்று இரவு அங்கேயே தங்கினார் கலெக்டர். மறுநாள் பேப்பரில் செய்தி வந்தது. கலவரம் வராமல் இருக்க பாளையநல்லூர் கிராமத்தில் இரவு முழுக்க தங்கிய கலெக்டர். என்னய்யா வந்த உடனே ஹீரோயிசமா என்று அமைச்சரிடமிருந்து போனும் வந்தது. 

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் சோதனை நடத்திய போது பெருசு சொன்னது உண்மையானது. ஆனால் இன்னொரு பிரச்சினை கிளம்பியது. அந்த இடம் வடக்கூருக்கு அருகில் இருப்பதால் தெற்கூர்காரர்கள் தங்களது தனியாக ஆழ்துளை கிணறு மற்றும் நீர்தேக்க தொட்டி வேண்டும் என்றனர். தெற்கூர் பகுதியில் நீரோட்டம் பார்க்க உத்தரவிட்டார் கலெக்டர். 

கலவரம் நடக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட கலெக்டரை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர். அந்த மீட்டிங்கின் போது அமைச்சர், கலெக்டரிடம் சொன்னது. பாளையநல்லூர் தெற்கூரில் வெறும் பாறைகள் இல்ல, கனிம வளம் கொட்டி கிடக்கிறது. அவர்களை வேறு பகுதிக்கு அனுப்பி விட்டால் கனிம வளங்களை எளிதில் எடுக்கலாம் என்றார். கபில் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உனக்கு வேண்டியது வரும் யோசிச்சு முடிவெடு என்றார் அமைச்சர். 

கபிலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கனிம வளம் பற்றிய செய்தியை சமூக ஆர்வலர்களுக்கு தெரிவித்தார். 

கசமாடனுக்கு பரிகாரம்செய்யும் நாளில் கலெக்டரும் அழைக்கப்பட்டார். அமைச்சர், எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். அன்றிரவு அங்கேயே தங்கி மக்களோடு பேச முடிவு செய்தார் கலெக்டர். 

இரவு கசமாடன் கோவில் அருகில் காத்தாட அமர்ந்தார் கலெக்டர். அப்போது முகத்தில் துணி கட்டி வந்த கும்பல் கபிலை வெட்டி சாய்த்தது. ஊரும் கலவர முகம் கொண்டது. 

மறுநாள் சாதி வெறியர்களால் கலெக்டர் வெட்டி கொல்லப்பட்டார் என்று செய்தி வந்தது. 

கசமாடன எதிர்த்து போர் போட்டு இப்படி உயிர விட்டுட்டாரே கலெக்டர் என்று கதறி அழுதார் ஊர் பெருசு. ஊர் மொத்தத்தையும் கைது செய்தனர். இரண்டு பிரிவினரையும் வேறு வேறு இடங்களில் குடி அமர்த்த வேண்டும் என்றது நீதிபதிகள் குழு. 

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை குழு அதிகாரியாக ரஞ்சிதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.