ஊருணியில் இருந்து
தீர்த்தம் எடுத்து வந்தாச்சு.
வில்லிசை நிறுத்தப்பட்டு
மேளமும் மணியும்
ஒலிக்கிறது.
சாமி அருள் யாருக்கும்
வரவில்லை.
மேளத்தின் வேகத்தைக்
கூட்டச் சொல்கிறார்
ஊர் பெருசு.
ஊருணி கரையில்
வேலை செய்யும்
ஜேசிபியை வேடிக்கை
பார்ததபடி இருக்கிறார்
காவல் தெய்வம்!!!
****
வேலைக்கு செல்லும்
ஜெயந்தி வேக வேகமாக
கிளம்பினாள்.
பேருந்து நிறுத்தத்தை
நெருங்கும் முன்
பேருந்து நகரத்
தொடங்கிவிட்டது.
கை காட்டினாள்,
அடுத்த பேருந்தில்
வரச்சொல்லி
அடுத்த கியரை
மாற்றினார் ஓட்டுனர்.
பேருந்தின் முகப்பில்
மகளிர் விடியல்
பேருந்து!!!
****
ஊருக்கு வெளியே
பரந்த இடத்தில் உள்ளது
கால்நடை மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி மையம்.
நிறைய ஆய்வுகள்
நடக்கின்றது.
ஆனாலும் ஊருக்குள்
இருக்கும் அரசு
மருத்துவமனையில்
மார்கழியை கொண்டாடுகின்றன
தெருநாய்கள்!!!
****
மாநாட்டிற்கு தலைவர்
வருவதால் சாலையில்
வேகத் தடைகள் இல்லை.
தலைவரைப் பார்க்க
வேகமாகச் சென்றான்
தொண்டன்.
வழியில் கட்டியிருந்த
வாழை மரத்தைப் பார்த்து
வந்தது மாடு.
தாமதமாக வந்த
தலைவருக்கு இரங்கல்
சொல்ல நேரமில்லை!!!
No comments:
Post a Comment