Thursday, 29 January 2026

கடவுள்களின் சந்திப்பு

ரேசனில் மூன்று நேரம்

நின்று பெற்ற மூவாயிரத்தோடு

முருகனைப் பார்கக வந்த

பக்தன் ஆறு மணி நேரம்

வரிசையில் நின்று

வேண்டுதலை வைத்தான். 

முன் இரவில் அந்த பக்தனை

பார்க்க ஆசைப்பட்டு

முருகர் கிளம்பினார். 

தெருவில் நுழையும்போதே

நாய்கள் சுற்றி விட

வேலன் வேலை எடுத்தார். 

பழுதடைந்த சாலையில்

பயணித்து களைப்பான

மயிலோடு சாலையோரம்

ஓய்வெடுத்தார். 

கால்வாய் ஓரத்தில்

கஞ்சா போதையில்

இருந்த ஒருவன்

கல்லெறிய மயில் பறக்க

காயமின்றி தப்பினார்

கந்தன். 

பக்தன் வீட்டினுள் சென்ற

போது ஆழந்த நித்திரையில்

இருந்தான் பக்தன். 

ஆறு மணி நேர காத்திருப்பு

தந்த அசதி என

நினைத்தார் சுப்பிரமணியன். 

பக்தனிடம் இருந்து வந்த

மது வாசனை கந்தனை

காயப்படுத்தியது. 

வந்தது வந்தோம் வள்ளிக்கு

நகை வாங்கி செல்வோம்

எனநகைக்கடைக்கு சென்றார்

மயில் வாகனன். 

தங்கம் விலையை பார்த்து

மயங்கி சரிந்தார் வடிவேலன். 

கடை வளாகத்தில் இருந்த

கணேசரை அழைத்து வந்தது

மயில். 

டேய் தம்பி என்னாச்சு

என ஓடி வந்தார் கணேசன். 

மயிலிடம் 10 ரூபாயை

கொடுத்து தண்ணீர் பாட்டில்

வாங்கி வரச் சொன்னார்

விநாயகன். 

பாட்டிலுக்கு பத்து ரூபாயா? 

என்றார் அரை மயக்கத்தில்

முருகன். 

டேய் தம்பி இது தண்ணி பாட்டில் டா

என்று பதிலுரைத்தார்

யானை முகத்தான். 

ஜிஎஸ்டி குறைஞ்சதுல 

தண்ணீர் பாட்டில் விலை

குறையவில்லையா? 

மீண்டும் முருகன். 

அதற்காக 2 சொட்டு தண்ணீர்

அதிகமாகிட்டாங்க தம்பி. 

தம்பி கண் விழித்ததும்

சகோதரர்கள் இருவரும்

நண்பர் இயேசுவை பார்க்க

கிளம்பினர். 

மாப்ளே, இயேசு என்று

கதவை தட்ட,  உள்ளேயிருந்த

இயேசு, டேய் போதை ஆசாமிகளா

இது சர்ச், பிளாக்ல சரக்கு 

கிடைக்கிற கடை

கடைசில இருக்கு என்றார். 

மீண்டும் கதவு தட்ட

எழுந்து வந்து கதவை திறந்தார்

இயேசு. 

என்னய்யா இவ்வளவு

சீக்கிரமே தூக்கம் என்றார் முருகன். 

தைப்பூசம் வருவதில்லை

என்றார் இயேசு. 

தைப்பூசத்துக்கும் உனக்கும்

என்ன சம்பந்தம்? 

அதான் மாப்ள எனக்கும்

தெரியலை ஆனால்

முழு இரவு ஜெபம்

ஏற்பாடு பண்ணி இருக்கானுக. 

இருவரும் சிரிக்க

நீங்க ஜாலியா இருக்கீங்க

அப்படி தானே. 

யோவ் நீ வேற நண்பா

முதற்கடவுள்னு தான் பேரு

கடைசியா தான் வந்தார்

விநாயக்னு கலாய்கிறானுக

என்றார் பிள்ளையார்

பரிதாபமாக. 

மூவரும் சேர்ந்து

அடுத்த நண்பர் அல்லாவை

பார்க்க சென்றனர். 

அல்லா மாம்ஸ், அல்லா மாம்ஸ்

என்று கதவை தட்ட

அல்லா எழவில்லை. 

மாம்ஸ வெடி வச்சு

தான் எழுப்பனும் போல

என்று இயேசு சொல்ல

பதறி எழுந்தார் அல்லா. 

என்ன மாம்ஸ் இவ்வளவு

பதட்டம் என பிள்ளையார் கேட்க

எளவு வீட்டுல வெடி வச்சா கூட

என் பேர்ல தான் எழுதுறாங்க

என்றார் அல்லா. 

மற்ற மூவரும் சிரிக்க

முருகன் சொன்னார்

இன்னைய தேதில அல்லா மாம்ஸ்

தான் மாஸ் என்று. 

ஆமா, தேர்தல் வருது

வாங்கு வங்கி இருக்கு

புகழ் மாலை தான் அல்லாவுக்கு

என்றார் பிள்ளையார். 

அது தான் எனக்கும் பயம்

தேர்தல் முடிஞ்சா 

என்னய தெருவுல

விட்டுருவாங்க மாப்ள

என்றார் அல்லா. 

நால்வரும் சிரித்து

நகர்ந்தனர். 




No comments:

Post a Comment