சங்க இலக்கியங்கள் குறித்து எதிலாவது வாசித்தால், நாமும் சங்க இலக்கியங்களை வாசிக்கலாமே என்று தோன்றும். ஆனால் எப்படி தொடங்குவது. அதற்கான திறவுகோலைத் தந்திருக்கிறது இந்தக் காஃபி வித் கபிலர் புத்தகம்.
பொதுவாக சர்ச்களில் பைபிளின் சில வசனங்களை வாசித்து விட்டு, அதற்கான விளக்கத்தை (பிரசங்கம்) தருவார்கள். அதற்கு நேர் எதிரே உள்ளது இந்தப் புத்தகம் ஒரு விளக்கம் அல்லது சம்பவத்தை சொல்லிவிட்டு அதை ஒரு சங்கப் பாடலோடு இணைத்திருக்கிறார் ஆசிரியர்.
தமிழ் இலக்கிய வளர்ச்சி இது நிச்சயத் தேவை. இதை பார்த்து, வாசித்து இன்னும் நிறைய பேர் இது போன்ற எழுத்துகளை முன்னெடுத்தால் இலக்கிய வளர்ச்சி செழுமையாக இருக்கும்.
சங்கப் பாடல்களின் ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு வரி அவரை கவர அதை வைத்து அய்யனாரை வேண்டும் அக்கா, வியாழக்கிழமை விகடன், டீ குடிக்கும் போதே கலைத்து விட்ட காதல் ஜோடிகள் என எளிதாக எவரையும் ஈர்க்கும் விளக்கங்களால் ஈர்க்கிறார்.
இதின் தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது நெல்லிக்காய் தின்ற பின் குடிக்கும் தண்ணீரை போன்றது. (இந்த உவமை அவரிடம் சுட்டது தான்).

No comments:
Post a Comment