X தளத்தில் உங்களை பின்தொடர்பவர்களில் அழகானவர் யார் என்று ஒருவர் கேட்டு இருந்தார். சட்டென்று என் மனதில் உதயமானது சரண் மாம்ஸ் தான்.
சரண் மாம்ஸ் அழகானவரா?
ஆண்களில் அழகென்பது முகவெட்டில் அல்லது சிவப்பு தோலில் இல்லை. ஆண்களின் அழகு அவர்களின் பர்சனாலிட்டியில் தான் உள்ளது. அதனால் தான் கருப்பாக இருந்தாலும் ரஜினிகாந்த்தும், விஜயகாந்த்தும் அழகானவர்கள் என்று நண்பன் தினேஷ் கல்லூரி காலத்தில் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.
ஆணழகன் போட்டியில் உடல் வலிமையை காட்டி வெல்லலாம். ஆனால் மனவலிமை உடையவர்கள் தான் உண்மையான ஆணழகன்.
சரி சரண் மாம்ஸ்க்கு வருவோம். திருநெல்வேலி மழைகாலத்தில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். முதலில் பார்த்தப்ப "யார்டா இவன்" என்று நினைத்தேன். "யார் சாமி இவன்" என்று நினைக்க வைத்தார் மனுசன்.
அவருடைய சந்திப்புக்கு வருவோம். போன் நம்பர் வாங்கியவர், திடீரென ஒருநாள் போன் பண்ணி மீட் பண்ணலாமா என்றார். அன்றே மீட் பண்ணோம்.
கருப்பு நிறம், முடி கொட்டிய தலை, வெள்ளை மனசுடைய ஒருவருடன் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நிறைய பேசினோம், எனக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்தார்.
சமூகப் பணிகளில் முழு ஈடுபாடு, பயணங்கள், குடும்பம் என நிறைய பேசி புத்தகங்களில் வந்து நிறுத்தினோம்.
தனது நேரத்தில் பாதியை சமூக பணியில் ஈடுபடுத்தி, அதற்காக பலரையும் தொடர்பு கொண்டு உதவிகளை செய்து வரும் சரண் மாம்ஸ் அழகானவர் என்பதில் என்ன சந்தேகம்.
No comments:
Post a Comment