அச்சுப் புத்தகங்கள் வழக்கொழிந்து வரும் இன்றைய சூழலில் வாசகனை வாசிக்க தூண்டும் வசியம் தெரிந்தவர் நர்சிம் அண்ணன்.
பஃறுளியில் அரசியல் இருக்கிறது, வாசகனுக்கு கடத்தும் அளவுக்கு. ஜல்லிக்கட்டின் சாதி பற்றி பேசியுள்ளார், ஆழமாக பேசவில்லை. ஆனாலும் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசியுள்ளார்.
பெண்ணியம் பேசியுள்ளார், அலப்பறை இல்லாமல் ஆத்மார்த்தமாக. மதுரை மண்ணை தோண்டி நிறைய கதைகள் எடுக்க இவரால் எளிதாக முடிகிறது.
மாயக்கண்ணன், கோமதி, தேவராஜன் என்றதும் வாசகன் அவனாகவே தூரிகை கொண்டு ஒரு ஓவியத்தை வரைந்து கொள்வான் அந்த அளவுக்கு அவரது எழுத்தில் நேர்த்தி.
நர்சிம் அவர்களின் சொல்லாடல் பற்றி சொல்லத் தேவையில்லை. வாசிப்பு, மறுவாசிப்பு என வாசகனை கட்டி போட்டு விடுவார். ஒரே ஊரில் வாழ்ந்தால் கூட தேவராஜன் போல் நட்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
நாவலில் எதிர்மறை கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும் என மீண்டும் நிரூபித்துள்ளார்.
வாசித்து முடித்த பிறகு புளியம் பூக்கள் தலையில் கிடப்பது போன்றோ, புல்லட் சத்தம் கேட்பது போன்றோ தோன்றும்.
No comments:
Post a Comment