நண்பனோடு சதுரங்கம் !
எனக்கு குதிரைகளை லாவகமாக
பயன்படுத்த தெரியாது !
அடுத்தடுத்த ஐந்து காய்
நகர்த்தலை யோசித்து
அவன் குதிரையை
தாக்கினேன்
அவன் என் மந்திரியை
முடித்தான் !
பழிக்கு பழியாக
நான் அவன் மந்திரியை
குறிவைத்த போது
என் யானையை கொன்று
விட்டான் !
என் ஆத்திரத்தை பயன்படுத்தி
ராணியையும் கொன்றான்.
அடுத்து என் ராஜாவுக்கு
கிடுக்கிப்பிடி போடுவான்
என்ற நொடியில்
காய்களை கலைத்துவிட்டு
எழுந்தேன் !
ஆட்டம் சமனில் முடிந்தது!
எனக்கு குதிரைகளை லாவகமாக
பயன்படுத்த தெரியாது!!!
No comments:
Post a Comment