சீனுவை உள் அறைகளுக்கு கூட்டி வருவது அப்பாவுக்கு பிடிக்காது. அதத அந்தெந்த எடத்துல தான் வைக்கனும் என்பார் அப்பா.
ஆனால் சாப்பிட உட்காரும்போது சீனு சாப்பிட்டானா என்று கேட்டுவிட்டு தான் உட்காருவார்.
ஆற்றில் இறங்க பயப்படுவான், படித்துறையில் நின்றே குளித்துவிடுவான். யாரையாவது பயமுறுத்த வேண்டும் சீனுவை வைத்து சாதிக்கலாம்.
அம்மாவை பஸ் ஏற்றிவிட தினமும் பஸ் ஸ்டாப் வரை சென்று வீட்டுக்கு திரும்பி விடுவான் சீனு. ஒருநாள் அவனும் பஸ்ஸில் ஏற முயற்சிக்க எல்லாரும் துறத்த பின்னால் வந்த பஸ் அடித்து விட்டான்.
காயங்கள் கட்டுகளோடு, எங்களோடே பத்து நாட்கள் படுத்திருந்த சீனு மரணித்து விட்டான்.
அதற்கு பின் எத்தனையோ பேர் வந்தார்கள், வீட்டு காவலர்களாக இருந்தார்களே தவிர, சீனு போல் வீட்டில் ஒருவனாக மாற முடியவில்லை.
❤️❤️❤️❤️🙌🙌🙌🙌
ReplyDelete🙌
Delete