பிறகு எங்கள் பக்கத்து ஊரான மானூரின் பெயரில் இன்னொரு ஊரான சின்னமனூர்.
கொஞ்சம் வளர்ந்த பின் கள்ளிக்காட்டு இதிகாசம் மூலம் வைகை அணை தெரியும்.
தேனி மாவட்டத்தின் சிறப்புகளை / வரலாற்றை அழகு தமிழில் விஜயானந்தலட்சுமி எழுதியுள்ள இந்த புத்தகம் மூலம் தெரிந்து கொண்டேன்.
சமீப காலமாக முல்லை பெரியாறு பிரச்சனையால் பென்னிகுவிக் பற்றி தெரியும். மற்ற விசயங்கள் எல்லாமே எனக்கு புதிது.
ஆய்ந்தறிந்து 44 தலைப்புகளில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகம் பற்றி கீச்சகத்தில் வந்ததும் ஆசிரியரிடமே வினவினேன் எந்த மாதிரியான புத்தகம் என்று. அவர் அளித்த பதிலே இந்த புத்தகத்தை வாங்க வைத்தது.
சுந்தர பாண்டியன் படத்தில் வரும் கருத்த ராவுத்தர் என்ற பெயரை சாதாரணமாக கடந்திருப்போம். ஆனால் கருத்த ராவுத்தர் பற்றி இவர் தரும் தகவல்கள் வியக்க வைக்கிறது.
ஒவ்வொரு தலைப்பையும் முடிக்கும் இடத்தில் அடுத்த தலைப்பை இணைத்திருக்கும் இவரது எழுத்தாழுமை சிறப்பு.
சங்க கால நடுகல் முதல் சமகால நியூட்ரினோ வரை எல்லாவற்றையும் எழுதியுள்ளார்.
ஒரு பெண்ணாக இந்த நூலுக்கு இவர் எவ்வளவு பேரை சந்தித்திருப்பார், எவ்வளவு நூல்களை ஆய்ந்து இருப்பார் என்று நினைக்கும் போதே இவரை பாராட்ட தோன்றுகிறது.
சிறிய அளவிலே உள்ள முன்னுரை சொல்கிறது இது இவரது இரண்டாவது நூல் என்று. இவர் இன்னும் நிறைய படைப்புகளை தமிழுக்கு தர வேண்டும்.
பசுமை நிறைந்த தேனி மாவட்டத்தை மண் மணம் மாறாமல் எழுதியுள்ளார். பொதுவாக வரலாற்றை வாசிப்பது எரிச்சல் தரும். மதனின் வந்தார்கள் வென்றார்கள் வித்தியாசமான அனுபவத்தை தரும். அதுபோல மனிதர்களை வைத்து வரலாற்றையும் சிறப்புகளையும் சொல்லி இருப்பது நல்ல சுவராஸ்யமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.
No comments:
Post a Comment