Monday, 28 June 2021

ராபின் சிங்

ராபின் சிங் பெயர் கிறிஸ்தவர் பெயர் போல் இருந்தாலும் இவரின் முழுப்பெயர் ராபிந்திர ராம்நரைன் சிங்.

இவர் கரிபிய நாடான டிரினிடாட்டில் இந்திய - டிரினிடாடிய பெற்றோருக்கு பிறந்தவர்.

1984ல் சென்னைக்கு வந்தார்.சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார். தமிழக ரஞ்சி அணியில் கிரிக்கெட் விளையாடினார்.

தனது ஆல்ரவுண்டர் திறமையால் கலக்கினார். இந்திய குடியுரிமை பெற்றதால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 1989ல் வெங்கசர்க்கார் தலைமையில் இந்திய அணியில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில்.

போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழக அணியில் இருந்து இந்திய அணிக்கு தேர்வான முதல் தமிழ் பிராமின் அல்லாதவர்.

ஏழு ஆண்டுகளுக்கு பின் 1996 ல் மீண்டும் இந்திய அணிக்கு வந்தார்.

இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் மிலிட்டரி மீடியம் பந்துவீச்சு என கலக்கினார்.

ஆடையின் மடிப்பு கலையாமல் பீல்டிங் செய்தவர்கள் மத்தியில் கீழே விழுந்து பீல்டிங் செய்து காட்டினார்.

இவர் 1996 முதல் 2001 வரை அணியில் தொடர்ந்தார்.

136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2336 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதமும் 9 அரை சதமும் அடித்துள்ளார்.

பந்து வீச்சில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இருமுறை ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இவருக்கு பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சரியான பார்ட்னர் அஜய் ஜடேஜா தான். கவர், பாயிண்ட் தான் இவர்களின் பீல்டிங் போசிசன்.

பேட்டிங்கில் துவக்க விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டால் நங்கூரத்தை போட்டு கவுரமான ஸ்கோர் வர உதவுவார்கள்.

ஜிம்பாப்வே உடனான ஒரு போட்டியில் 8 வது வீரராக களமிறங்கினார். 10 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும்.அடித்து ஆடினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை. பவுலர் வைடாக வீச எதிரிலிருந்த பிரசாத் ஓடி வர ரன்அவுட் ஆனார். அதற்குள் ரசிகர்கள் களத்தினுள் ஓடி வந்ததால் ஆட்டம் டை.சிங் ஆட்டநாயகன்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இறுதி போட்டியில் 314 ரன்களை சேஸ் செய்தது இந்தியா. ஒன்டவுன் இறங்கி 82 ரன்கள் அடித்தார். கங்குலியுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்தார். கடைசியாக கனிட்கர் போர் அடிக்க இந்தியா வென்றது.

இவர் சதமடித்த போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டது. ரொம்ப களைப்பாக களத்தில் காணப்பட்டார். போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ராபின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியுள்ளார்.

1999 ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா ஜிம்பாப்வேவுடன் மூன்று ரன்களில் தோற்றது. அந்த போட்டியில் சிங் எட்டாவது விக்கெட்டாக அவுட் ஆனார். நாலு ஓவர்களில் 7 ரன்கள் என்று தான் இலக்கு. அந்த போட்டியில் வென்றிருந்தால் அந்த உலக கோப்பையே மாறி இருக்கும்.

1999 உலக கோப்பையில் இலங்கை உடனான போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

ரன் குவிப்பை கட்டுபடுத்த அசாருதீனின் ஆயுதம் ராபின்.

ஆஸியுடனான போட்டியில் மார்க் வாவ், பாண்டிங் விக்கெட்டை வீழ்த்தினார்.‌ பேட்டிங்கிலும் 75.

ராபின் தனி சிறப்பு ரன் அவுட் ஆகாமல் தரையில் விழுவது. சிறப்பான பீல்டிங்.

தவறவிட்டால் ஸ்டம்பை பதம் பார்க்கும் பவுலிங்.

1996 உலக கோப்பையில் மும்பை லாபியில் மஞ்சரேக்கர், காம்ளி, அங்கோலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

திறமையான ராபின் இடம் பெற்றிருந்தால் ஒரு வேளை இந்தியா வென்றிருக்கலாம்.

2001 ல் யுவராஜ் சிங் வந்துவிட அந்த இடத்திற்கு யுவராஜ் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து 2004ல் ஓய்வு பெற்றார்.

அதற்கு பின் பயிற்சியாளராக இன்றும் களத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment