Wednesday, 30 June 2021

12/100. ஆச்சியும் வில்லுபாட்டும்

கோவில் கொடை என்றால்

ஒரு வாரம் முன்னதாகவே

பாம்படத்தை சோப்பு போட்டு

பளபளக்க வைத்து விடுவாள் !

மடியில் வெற்றிலை,

சுருக்கு பையில் பணம் என

வில்லுப்பாட்டு கேட்க

விரைந்து விடுவாள் கோவிலுக்கு !

ஆறு மணல் பரப்பப்பட்ட

இடத்தில் சாக்கை விரித்து

உட்கார்ந்து கொள்வாள் !

ஆண்டுதோறும் கேட்ட 

கதைதான் என்றாலும்

வில்லிசை கலைஞரின் 

புலமையை ரசிப்பதும்

பக்க வாத்திய கலைஞரின் 

உடல்மொழியை கண்டு 

சிரிப்பதும் அவளின் 

ஆகச் சிறந்த கேளிக்கை !

நாங்கள் தூங்க தினமும்

கதை சொல்லும் ஆச்சி

தூங்காமல் கதை கேட்பது

வில்லு பாட்டில் !!!











No comments:

Post a Comment