கோவில் கொடை என்றால்
ஒரு வாரம் முன்னதாகவே
பாம்படத்தை சோப்பு போட்டு
பளபளக்க வைத்து விடுவாள் !
மடியில் வெற்றிலை,
சுருக்கு பையில் பணம் என
வில்லுப்பாட்டு கேட்க
விரைந்து விடுவாள் கோவிலுக்கு !
ஆறு மணல் பரப்பப்பட்ட
இடத்தில் சாக்கை விரித்து
உட்கார்ந்து கொள்வாள் !
ஆண்டுதோறும் கேட்ட
கதைதான் என்றாலும்
வில்லிசை கலைஞரின்
புலமையை ரசிப்பதும்
பக்க வாத்திய கலைஞரின்
உடல்மொழியை கண்டு
சிரிப்பதும் அவளின்
ஆகச் சிறந்த கேளிக்கை !
நாங்கள் தூங்க தினமும்
கதை சொல்லும் ஆச்சி
தூங்காமல் கதை கேட்பது
வில்லு பாட்டில் !!!
No comments:
Post a Comment