Tuesday, 8 June 2021

11/100. மழை நாட்கள்

 பால்யத்தில் பள்ளி விடுமுறை

என்று மகிழ்ந்தாலும் 

புயல் கொணர்ந்த அந்த 

பெருமழையில் சிறுநீர் 

கழிக்கவே சிரமமாக இருந்தது !

பல்கலை தேர்வுகளை 

ரத்து செய்ய வைத்தது

தள்ளி தள்ளி போகும் தேர்வுகளால்

மீண்டும் மீண்டும் புத்தகத்தை 

புரட்ட வைத்தது 

கல்லூரி நாளின் கடும்மழை !

வேளச்சேரி அறையில்

இருந்த போது பரணில் 

ஏறி படுக்க வைத்தது

பலத்த மழை !

ஓர் இரவு திருச்சிக்கும் 

அடுத்த இரவு நெல்லைக்கும் 

பயணித்தபோது 

கூடவே தாலாட்டியது 

பருவ மழை !

தொலைதொடர்பை தொலைத்து 

மனிதர்களை அலையவிட்டு 

மனிதத்தின் அவசியத்தை 

கற்று தந்தது 

மாநகரில் பெய்த மாமழை !

காலை முதல் காற்றோடு 

கொட்டி தீர்த்து 

மாலையில் தேநீர் இடைவேளை

விட்டு மீண்டும் கொட்டி 

தீர்த்தது  வர்தா வரவழைத்த 

கொடூர மழை ! 

பருவ மழை காலத்தில் 

எங்கள் ஊரை கழுவி 

செந்நீராய் ஓடையில் 

ஓடும் அந்த மழை 

அழகான கவிதை !!!





















No comments:

Post a Comment