பால்யத்தில் பள்ளி விடுமுறை
என்று மகிழ்ந்தாலும்
புயல் கொணர்ந்த அந்த
பெருமழையில் சிறுநீர்
கழிக்கவே சிரமமாக இருந்தது !
பல்கலை தேர்வுகளை
ரத்து செய்ய வைத்தது
தள்ளி தள்ளி போகும் தேர்வுகளால்
மீண்டும் மீண்டும் புத்தகத்தை
புரட்ட வைத்தது
கல்லூரி நாளின் கடும்மழை !
வேளச்சேரி அறையில்
இருந்த போது பரணில்
ஏறி படுக்க வைத்தது
பலத்த மழை !
ஓர் இரவு திருச்சிக்கும்
அடுத்த இரவு நெல்லைக்கும்
பயணித்தபோது
கூடவே தாலாட்டியது
பருவ மழை !
தொலைதொடர்பை தொலைத்து
மனிதர்களை அலையவிட்டு
மனிதத்தின் அவசியத்தை
கற்று தந்தது
மாநகரில் பெய்த மாமழை !
காலை முதல் காற்றோடு
கொட்டி தீர்த்து
மாலையில் தேநீர் இடைவேளை
விட்டு மீண்டும் கொட்டி
தீர்த்தது வர்தா வரவழைத்த
கொடூர மழை !
பருவ மழை காலத்தில்
எங்கள் ஊரை கழுவி
செந்நீராய் ஓடையில்
ஓடும் அந்த மழை
அழகான கவிதை !!!
No comments:
Post a Comment