ஒதுங்கி நின்றாலும்
நன்றாக நனைந்துவிட்டேன்.
வலுவாக கொட்டுகிறது வானம் !
எட்டு பிள்ளைகள் பெற்று
ரெண்டை பறிகொடுத்த அம்மா
என்னை தேடுவாள் !
அறுவரையும் ஒருபோதும்
நனைய விட்டதில்லை !
அப்பா எங்களை
கண்டுகொள்வதில்லை
மழை விட்டால்
கூத்தடிக்க கிளம்பிவிடுவார் !
குளிரால் நடுங்குகிறேன்
அம்மா எப்போதும் குளிர்
தெரியாமல் அணைத்து
கொள்வாள் !
இப்போது சென்றால்
என்னை திட்டுவாளா
என்னை கண்டு மகிழ்வாளா ?
- மழையில் நனைந்த கோழிக்குஞ்சு !!!
No comments:
Post a Comment