Wednesday, 2 June 2021

10/100. மழை நனைந்த...

ஒதுங்கி நின்றாலும் 

நன்றாக நனைந்துவிட்டேன்.

வலுவாக கொட்டுகிறது வானம் !

எட்டு பிள்ளைகள் பெற்று 

ரெண்டை பறிகொடுத்த அம்மா

என்னை தேடுவாள் !

அறுவரையும் ஒருபோதும்

நனைய விட்டதில்லை !

அப்பா எங்களை

கண்டுகொள்வதில்லை 

மழை விட்டால் 

கூத்தடிக்க கிளம்பிவிடுவார் !

குளிரால் நடுங்குகிறேன் 

அம்மா எப்போதும் குளிர் 

தெரியாமல் அணைத்து 

கொள்வாள் ! 

இப்போது சென்றால் 

என்னை திட்டுவாளா 

என்னை கண்டு மகிழ்வாளா ?

- மழையில் நனைந்த கோழிக்குஞ்சு !!!







No comments:

Post a Comment