நெகிழிப் பைகள் பயன்பாட்டை
நிறுத்த மாட்டோம்.
நிலத்தடி நீர் சரியில்லை
என சலித்து கொள்வோம் !
மக்கும் மக்காத குப்பை என
பிரித்து கொடுக்க மாட்டோம்.
நகராட்சி ஊழியர் நேரத்துக்கு
வரவில்லை என்போம் !
மரங்கள் இல்லா மாநகரில்
வீடு வாங்கி கொள்வோம்.
ஜன்னல் இருந்தும் காற்று
வரவில்லை என்போம் !
தனி குடும்பமாய் இருப்போம்.
கூட்டு குடும்ப சீரியல்
அவலத்தில் கவலை கொள்வோம் !
சமூக இடைவெளி விடமாட்டோம்.
இடைவெளிவிட்டு நிற்பவனை
முந்தி சென்று அவனை
இளிச்சவாயன் போல் பார்ப்போம் !!!
No comments:
Post a Comment