நேர்காணலுக்கு சென்று
நிராகரிக்கப்பட்ட நாட்கள் !
தேநீரை காலை உணவாக
அருந்திய நாட்கள் !
நண்பர்கள் ஒவ்வொருவாய்
மேன்ஷனை காலி
செய்ய நாட்கள் !
ஹோட்டலையும் கோவிலையும்
தேடி அலைந்த
வணிகர் தின மற்றும்
ஆயுத பூஜை நாட்கள் !
பலர் முன்னிலையில்
அலுவலகத்தில் திட்டு
வாங்கிய நாட்கள் !
முந்தைய நாள் முன்பதிவில்லாமல்
வந்ததால் கண்
எரிச்சலான நாட்கள் !
அடுத்த என்ன நடக்கும்
என்று தெரியாமல் தவித்த
கனமழை நாட்கள் !
சோகத்தோடு இருந்த
மனைவி தேற்ற
வழியற்றிருந்த நாட்கள் !
இவையெல்லாம் சென்னையில்
எனக்கு கொடிய நாட்கள் !
ஆனால் எதை தொடுவதற்கும்
பயந்து யாரிடமும் பேச பயந்து
முகக்கவசம், கையுறை
கிருமி நாசினி என
இருக்கும் இந்த நாட்கள்
கொடூரமானவை !!!
No comments:
Post a Comment