குளத்து மடையில்
பேய் இருப்பதாக
சொல்லப்பட்ட வதந்தி தான்
நான் முதலில் நம்பியது !
பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருக்கும்
இடம் ஒரு காலத்தில்
சுடுகாடு என்பது பள்ளி நாட்களில்!
விழுந்த பல்லை சாணிக்குள்
வைத்து கூரை மேல் எறியாவிட்டால்
மீண்டும் பல் முளைக்காது !
ஜெயசூர்யா பேட்டில் காந்த சுருள்
உள்ளதென்றும்
முரளிதரன் கையில்
எந்திர தகடு பதித்துள்ளார்
என்பதும் கிரிக்கெட் வதந்தி !
தேர்வு முடிவுகள் வெளியாகி
விட்டது என்று அடிக்கடி
சொல்லப்படும் கல்லூரியில் !
போனஸ், ஊதிய உயர்வு
அலுவலகத்தில் ஆண்டுதோறும்
பரப்படும் வதந்தி !
சென்னை மழைக்கு தப்பி
ஊருக்கு சென்ற
பேருந்தில் பரப்பப்பட்டது
சென்னையில் மீண்டும் மழை,
பிழைத்தவர்கள் பஞ்சம்
பிழைக்க எங்காவது செல்ல
வேண்டும் சென்னை
மூழ்கிவிடும் என்று !
கடைசியாக நான் நம்பியது
வெயில் சுட்டெரிக்கும்
நம் நாட்டில் கோரோனோ
வைரஸால் உயிர் வாழ முடியாது !!!
No comments:
Post a Comment