Thursday, 6 May 2021

3/100. வதந்திகள்

 குளத்து மடையில் 

பேய் இருப்பதாக 

சொல்லப்பட்ட வதந்தி தான்

நான் முதலில் நம்பியது !


பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருக்கும்

இடம் ஒரு காலத்தில்

சுடுகாடு என்பது பள்ளி நாட்களில்!


விழுந்த பல்லை சாணிக்குள் 

வைத்து கூரை மேல் எறியாவிட்டால் 

மீண்டும் பல் முளைக்காது !


ஜெயசூர்யா பேட்டில் காந்த சுருள் 

உள்ளதென்றும்

முரளிதரன் கையில்

எந்திர தகடு பதித்துள்ளார்

என்பதும் கிரிக்கெட் வதந்தி !


தேர்வு முடிவுகள் வெளியாகி

விட்டது என்று அடிக்கடி

சொல்லப்படும் கல்லூரியில் !


போனஸ், ஊதிய உயர்வு

அலுவலகத்தில் ஆண்டுதோறும் 

பரப்படும் வதந்தி !


சென்னை மழைக்கு தப்பி 

ஊருக்கு சென்ற

பேருந்தில் பரப்பப்பட்டது 

சென்னையில் மீண்டும் மழை, 

பிழைத்தவர்கள் பஞ்சம் 

பிழைக்க எங்காவது செல்ல 

வேண்டும் சென்னை 

மூழ்கிவிடும் என்று !


கடைசியாக நான் நம்பியது 

வெயில் சுட்டெரிக்கும்

நம் நாட்டில் கோரோனோ 

வைரஸால் உயிர் வாழ முடியாது !!!















No comments:

Post a Comment