சிறு வயதில் என்னை
கூட்டி செல்லும் ஆஸ்பத்திரி.
வாசலை கடக்கும் போதே
பயம் கவ்வி கொள்ளும்.
உள்ளே நுழைந்ததும்
கனிவான இயேசு நாதர்
படம் வரவேற்கும் !
அடுத்து தவழும் குழந்தை,
அதற்கடுத்து இயேசு முள் கிரீடம்
சூட்டப்பட்டு இதயத்தை திறந்து
காட்டும் படம் பயத்தை கூட்டும் !
மருத்துவர் அறையில்
வாயில் விரலை வைத்து
உஷ்ஷ் என சொல்லும்
குழந்தை படம்.
ஊசி போடும் அறையில்
கன்னத்தில் கண்ணீர்
வழிந்தோடும் குழந்தை
படம் கண்ணீரை
வர வைத்து விடும் !
புட்டத்தை தேய்த்து கொண்டே
வெளியே வரும் போது
இயேசு நாதர் படத்தை
கனிவாய் பார்க்க
தோன்றியதில்லை!!!
No comments:
Post a Comment