குருவி கூட்டை
கலைக்காமல் வெள்ளையடிக்க
சொல்வார்.
ஒரு எலியை கூட விடாமல்
கொன்று கோழிக்கு
இரையாக்குவார் !
கோழி குஞ்சை தூக்கி
செல்லும் காக்கையை
விரட்டி காப்பாற்றுவார்.
கொஞ்சம் வளர்ந்ததும்
இந்த சேவல் கசமாடனுக்கு
என்று நேர்ந்து கொள்வார் !
மேய்ச்சலுக்கு செல்லும் போது
மாட்டை அடித்து விரட்டுவார்.
கண்ணு போடும் தருணத்தில்
கண் விழித்தே கிடப்பார்
தொழுவத்தில் !
விடிந்த பின் ஈன்ற கன்றின்
வாசத்தை நுகர்நத பின் தான்
காப்பி குடிப்பார்.
மற்ற நாட்களில் அதே நேரத்தில்
மூன்று காப்பி குடித்திருப்பார் !
பண்ணையில் விட்ட
ஆட்டின் குட்டி இறந்துவிட்டால்
பண்ணையாளோடு சண்டை இடுவார்.
காளை கன்றை கோவிலுக்கு
கொடுத்து விடுவார் !
மடியில் சொக்கலால் பீடியோடு
சுற்றி வருபவர்
மரண தருவாயில் கூட
மருமகளிடம் பீடி பற்றவைத்து
கேட்டவர் !
இறந்த போது குழிக்குள்
வைக்க சொக்கலால் பீடி
கிடைக்கவில்லை.
வேறு ஒரு பீடி கட்டு வைத்து
புதைத்தோம்.
நிச்சயம் திட்டி இருப்பார்
பேரன்களை !!!
No comments:
Post a Comment