டுவிட்டரில் புதுசா ஒருத்தர் பாலோ பண்ணினார். கிட்டத்தட்ட என்னோட ரசனை, என்னோட அலைவரிசையில் ஒத்துப்போன ஒருத்தர். நானும் அவரை பின்தொடர்ந்தேன்.
டுவிட்டரில் பழகிய தம்பி ஒருவர் போனில் பேசும் போது உங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்காரே ராமசந்திரன் தானே அவர் பேருனு கேட்டபோது, அதுவரை நண்பர் என்ற இடத்துக்கு வராத ராம் அன்று வந்தார்.
போன் நம்பர் பரிமாறிய பின்னர் நேரில் பார்க்க வேண்டும் என்றார். அவரே நேரில் வந்தார். எனது அலுவலகத்திற்கு அருகில். நாங்கள் சந்தித்தது ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில். என்னை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒரு பரிசும் அளித்தார். திடீர் சந்திப்பு, பரிசளிப்பு என ஆச்சர்ய படுத்தியவருக்கு நான் ஒரு டீ கூட வாங்கி தரவில்லை அன்று.
எனது கடின சூழலில் ஆறுதல் தந்த நண்பர்களில் ஒருவர். மீண்டும் நேரில் வந்தார்.
திருநெல்வேலி வந்த பின் கிரிக்கெட் பற்றிய தமிழ் பத்திரிகை ஆரம்பிக்கலாமா என்றேன். தாராளமாக ஆரம்பிக்கலாம் என்று ஊக்கம் தந்தார். ஜனவரியில் தொடங்க நினைத்தது, டிசம்பரில் தொடங்கினோம். பிறகு மைக்கேல், கார்த்தி என அணியாய் மாறினோம்.
இப்படி ஒரு மனிதனா என்று வியக்க வைத்தவர் ராம் (இப்போது சரணும் இணைந்துள்ளார்). ஓடுகிறார், நடக்கிறார், பயணிக்கிறார், வாசிக்கிறார், எழுதுகிறார், உதவுகிறார், குரல் கொடுக்கிறார், களத்தில் நிற்கிறார், சமைக்கிறார், (பாத்திரம் கழுவுகிறார் !), சந்திக்கிறார், சிந்திக்கிறார் இன்னும் எத்தனையோ.
இன்று அவருக்கு பிறந்தநாள் பரிசேதும் கொடுக்கவில்லை. இந்த எழுத்துக்கள் மட்டுமே.
ராமச்சந்திரன் எனும் நண்பன் எனக்கு கிடைத்த பரிசு.
தலைவரே ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete