ஓடிப்போன மகளிடமிருந்து போன்
எப்படி இருக்க கண்ணா - மனசு சொல்கிறது.
இப்ப எதுக்கு போன் பண்ண - உதடு உச்சரிக்கிறது.
வீட்டுக்காரர் நல்லபடியா பார்த்துகிறாரா? - மனசு
நாங்க உயிரோட இருக்கமா இல்லையானு தெரிஞ்சுக்க போன் பண்ணயா? - உதடு.
பேரன்/ பேத்திய பார்க்க ஆசையா இருக்குதுடா - மனசு.
என் சொத்துல சல்லிக்காசு கூட உனக்கு கிடையாது - உதடு.
வளர்ச்சியடைந்த சமுதாயம் மனசுக்கு உதடுக்கும் நடுவே வறட்டு கௌரவம் என்ற மாயவலையை விரித்துள்ளது !!!
No comments:
Post a Comment