Thursday, 2 May 2024

கௌரவம்

ஓடிப்போன மகளிடமிருந்து போன்

எப்படி இருக்க கண்ணா - மனசு சொல்கிறது.

இப்ப எதுக்கு போன் பண்ண - உதடு உச்சரிக்கிறது.

வீட்டுக்காரர் நல்லபடியா பார்த்துகிறாரா? - மனசு

நாங்க உயிரோட இருக்கமா இல்லையானு தெரிஞ்சுக்க போன் பண்ணயா? - உதடு.

பேரன்/ பேத்திய பார்க்க ஆசையா இருக்குதுடா - மனசு.

என் சொத்துல சல்லிக்காசு கூட உனக்கு கிடையாது - உதடு.

வளர்ச்சியடைந்த சமுதாயம் மனசுக்கு உதடுக்கும் நடுவே வறட்டு கௌரவம் என்ற மாயவலையை விரித்துள்ளது !!!

No comments:

Post a Comment