2022 உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்திய அணி குறித்த பார்வை தான் இந்தப் பதிவு.
தயாரான விதம் :
ஆஸ்திரேலியாவில் போட்டி நடைபெறும் என்று தெரிந்தும் இந்திய அணி மந்தமாகவே தயாரானது. இந்த ஆண்டில் நடைபெற்ற நிறைய தொடர்களில் அணித் தலைவர் ரோகித்தே ஓய்வில் இருந்தார்.
ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு துவக்க ஆட்டக்காரர்களை தயார் செய்தது. பண்ட், சூர்ய குமார், இஷான், ராகுல் என சோதித்து ராகுலோடு களமிறங்கி முடிவானது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்பதால் அதற்கு முன்னால் ஏதேனும் தொடர் வைத்திருந்தால் அந்த சூழல் பழக வாய்ப்புண்டு. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவோடும் பாகிஸ்தான் நியூசிலாந்திலும் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆடியது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி ஆட்டத்திலாவது கொஞ்ச காலமாக ஆடாத இங்கிலாந்தை கேட்டிருக்கலாம். சமீபத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவுடனே ஆடியது.
அணித் தேர்வு
பும்ரா காயம் காரணமாக வெளியேற மாற்று ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்ட ஷமி ரொம்ப காலமாக டி20 போட்டிகளில் விளையாடாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஒருநாள் உலகக்கோப்பையில் வலது கை துவக்க ஆட்டக்காரர்களே ஆடினாலும், மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர்கள் வலுவாக இருந்தனர். 100 கோடி பேரில் இடது கை ஆட்டகாரர்களை இந்தியா தேடியது. பண்ட் மட்டுமே அகப்பட்டார்.
பகுதி நேர பந்து வீச்சாளர் பாண்ட்யா மட்டுமே. அவரும் முழு நேர பந்து வீச்சாளராக பணியாற்றினார். எல்லா நாடுகளும் தரமான லெக் ஸ்பின்னர் வைத்திருந்த போது இந்தியா கொஞ்ச காலமாக சரியாக வீசாத சகாலை தேர்வு செய்தது ஏனோ.
ராகுல் மோசமாக ஆடினாலும் ராகுல் டிராவிட்டால் காப்பாற்றப்பட்ட அவலமும் தொடர்ந்தது. அதே போல் கூடாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் பீல்டர்கள் அதிக தூரம் கிரவுண்டை கவர் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ரோகித், ஷமி, அஸ்வின் அதை செய்யும் அளவுக்கு இல்லை.
140+ வேகத்தோடு திறமையாக பந்து வீசும் யாரும் இந்தியாவில் இல்லை என்பது தேர்வு குழுவின் முடிவு. புவனேஸ் நல்ல ஸ்விங் செய்வார். அவரை அடித்தால் மொத்த அணியும் காலி என்பது அரை இறுதியில் தெரிந்த உண்மை.
ஆடிய விதம் :
இந்தியா எல்லா போட்டிகளிலும் மந்தமாகவே தொடங்கியது. முதல் போட்டியில் 12வது ஓவரில் அடித்து ஆட துவங்கியது.
அக்சர் பட்டேல் என்ன செய்தார் ? பேட்ஸ்மேனா பவுலரா என்ற குழப்பத்தில் ஏதோ செய்தார்.
ஹர்சல் பட்டேல் நிலையோ நிற்காமல் தண்ணீர் கொண்டு போனது தான்.
பீல்டிங் படு மோசம் என்று சொல்லி தெரிவதில்லை. யாருக்கும் டைரக்ட் ஹிட் அடிக்க தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கின் சறுக்கல்களை கோலி, சூர்யா, பாண்ட்யா சரிக்கட்டியதால் ஓட்டை வெளியே தெரியவில்லை.
மொத்தத்தில் தயாரான விதம், அணித் தேர்வு, ஆடிய விதம் எல்லாமே படு மோசம்.
ஆனால் ஒரே ஆறுதல் ரோகித் கேப்டன்சி.
புவனேஸ், அர்ஸதீப் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஸ்விங் பவுலர்கள், அவர்களை சரியாக பயன்படுத்தினார். டெத் ஓவர்கள் பலவீனத்தை சரிகட்டிவிட்டார். அக்சர் பட்டேலே மேலே இறக்கி பார்த்தார். பண்ட், கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தார்.
ஹர்திக் பவுலிங்க சரியாக கையாண்டார். அக்சரை பவர்ப்ளேவில் பந்து வீச வைத்தார் (ஆனால் பலனில்லை).
இந்திய கிரிக்கெட்டின் அரசியல் குறைந்தால் மீண்டும் ஒருநாள் வெல்வோம்.
No comments:
Post a Comment