புதுமுக எழுத்தாளர், இது அவரது இரண்டாவது புத்தகம். டுவிட்டர் சகோதரர் முத்துவால் அறிமுகமானது எனக்கு.
உளவியல் ரீதியாக கதைகளை எழுதியுள்ளார். ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்கியுள்ளார்.
நிறைய கதைகள் கதாபாத்திரம் சொல்வது போன்ற பாணியில் எழுதியுள்ளார்.
இன்னொரு அப்பா கதையில் ஒரு சிறுவனின் உளவியல் சிக்கலை எழுதி, அதே சமயம் மற்ற இருவரின் எண்ண ஓட்டங்களையும் எழுதியுள்ளார்.
அப்பாவின் காது கதையில் அப்பாவின் உளவியல் சிக்கலை அழகான நடையில் எழுதியுள்ளார்.
ஆதி மனிதனையும் சம கால மனிதனையும் திரைக்கதை போல் காட்சி படுத்தி ஒரு புள்ளியில் இணைத்து ஆ ஊ என்று முடித்திருப்பது சுவாரஸ்யம்.
அஸ்வதாமன் கதையின் கடைசி வரி ஏற்கனவே இன்னொரு கதையில் வாசித்திருக்கிறேன். கடைசிக்கு முந்திய வரி மோகன் ராஜ்ஜியம்.
வெற்று புனைவுகளாக இல்லாமல், ஆய்வுகள் தரவுகள் மூலமாக புனைவுகள் கொடுத்துள்ளார். சம கால அரசியலை பகடியாக சொல்லி இருக்கிறார். திருநங்கைகள் நல்ல பெயர் வைத்துள்ளோம், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோமா என்பது ஒரு சோற்று பதம்.
வானவில் போல பல வண்ண கதைகள் ஒரே தொகுப்பில். இன்னும் இவர் நிறைய எழுத வேண்டும். இதே மொழி ஆளுமையில்.
No comments:
Post a Comment