ரெக்காடோ பவல்
ஒரே போட்டியில் உச்சத்துக்கு போய் பின் வீழ்ந்துவிட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
சிங்கப்பூர் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் பவல் களமிறங்கி 93 பந்துகளில் 124 (9x4 8x6) ரன்கள் அடித்தார். இந்திய ரசிகர்கள் அந்த அடியை மறக்க மாட்டார்கள்.
https://www.espncricinfo.com/series/coca-cola-singapore-challenge-1999-61048/india-vs-west-indies-final-66236/full-scorecard
ஏனெனில் அந்த காலகட்டத்தில் 100 ஸ்டைர்க் ரேட் என்பதே சிறப்பான சம்பவம். 100க்கு மேல் என்றால் ருத்ரதாண்டவம்.
அந்த ஒரு போட்டியினால் அன்றைய ரசிகர்கள் சொன்னது, ஒண்ணு பவல சீக்கிரம் அவுட் ஆக்குங்க, இல்லைனா பவலுக்கு முன்னாடி விளையாடுறவங்கள அவுட் ஆக்காதீங்க.
அந்த போட்டிக்கு பிறகு டொராண்டோவில் நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறாமல், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் என தனித்தனியாக நடத்தப்பட்டது. இந்தியாவுடன் ஒரு அரைசதம் அடித்த பவல் பாகிஸ்தானுடன் பெரிதாக ஆடவில்லை.
எட்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார். லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இரண்டாவது போட்டியில் அரை சதம், 5 வது போட்டியில் சதம் என்பது பெரும் சாதனை.
109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 சதம், 8 அரை சதம் உட்பட 2085 ரன்கள் அடித்துள்ளார். அதில் 940 ரன்கள் 6வது வீரராக களம் இறங்கி.
2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
.jpeg)
No comments:
Post a Comment