Monday, 19 September 2022

கவிதைகளுக்கு மதிப்பில்லை

1

நயமான சொற்கள் 

இனிய மொழிநடை 

கள எதார்த்தம் என 

எத்தனை இருந்தாலும் 

கதைகளுக்கு கிடைக்கும்

மதிப்பு கவிதைகளுக்கில்லை‌.

வார்த்தைகள் நினைவில் 

இருந்தாலும் யாரோ 

எழுதியது என்றே 

சொல்லப்படுகிறது !

அம்மா என்னை 

கடினமான அறைக்குள் 

வைத்து பூட்டி சென்றாள். 

எனக்கு வண்ணமயமான

சிறகு முளைத்து வெளியே 

வந்தேன் !

பூங்காவில் மலர்விட்டு மலர் 

தாவி தேனெடுத்தேன். 

நன்றிக்கடனாக மகரந்தத்தை 

தூவினேன் !!

என்னை வெறுப்பவர்கள் எவரும் 

இல்லை என்பதே என் 

பிறவிப் பயன் !!!

3

நதி உருட்டிய கூழாங்கற்கள்

அப்படியே கிடக்கின்றன.

மணல் அள்ளிய பள்ளங்கள்

கிடக்கிறது.

பாசியை அகற்றிய 

பாறைகளும் இருக்கின்றன.

நதி நனைத்த கோரைகள் 

இருக்கின்றது.

தண்ணீர் இல்லை

என்றாலும் நதிகள்

நகர்வதில்லை !!!

4

நான் வாசித்த கவிதைகளில் 

புத்தன் அழகாக இருந்தான் !

தேடி அலைந்து சில 

புத்தன் சிலைகள் சேகரித்தேன் !!

புத்தனை சாதி வட்டத்தில்

சேர்ந்த பின் 

பரவலாக கிடைக்கும்

புத்தன் சிலைகளில் 

அழகியல் இல்லை !!!
















No comments:

Post a Comment