1
நயமான சொற்கள்
இனிய மொழிநடை
கள எதார்த்தம் என
எத்தனை இருந்தாலும்
கதைகளுக்கு கிடைக்கும்
மதிப்பு கவிதைகளுக்கில்லை.
வார்த்தைகள் நினைவில்
இருந்தாலும் யாரோ
எழுதியது என்றே
சொல்லப்படுகிறது !
2
அம்மா என்னை
கடினமான அறைக்குள்
வைத்து பூட்டி சென்றாள்.
எனக்கு வண்ணமயமான
சிறகு முளைத்து வெளியே
வந்தேன் !
பூங்காவில் மலர்விட்டு மலர்
தாவி தேனெடுத்தேன்.
நன்றிக்கடனாக மகரந்தத்தை
தூவினேன் !!
என்னை வெறுப்பவர்கள் எவரும்
இல்லை என்பதே என்
பிறவிப் பயன் !!!
3
நதி உருட்டிய கூழாங்கற்கள்
அப்படியே கிடக்கின்றன.
மணல் அள்ளிய பள்ளங்கள்
கிடக்கிறது.
பாசியை அகற்றிய
பாறைகளும் இருக்கின்றன.
நதி நனைத்த கோரைகள்
இருக்கின்றது.
தண்ணீர் இல்லை
என்றாலும் நதிகள்
நகர்வதில்லை !!!
4
நான் வாசித்த கவிதைகளில்
புத்தன் அழகாக இருந்தான் !
தேடி அலைந்து சில
புத்தன் சிலைகள் சேகரித்தேன் !!
புத்தனை சாதி வட்டத்தில்
சேர்ந்த பின்
பரவலாக கிடைக்கும்
புத்தன் சிலைகளில்
அழகியல் இல்லை !!!
No comments:
Post a Comment