இயற்கை பேரழிவுகள் எல்லா நாடுகளையும் புரட்டிப் போடும். ஆனால் மனிதன் நிகழ்த்தும் பேரழிவுகள்...
யூனியன் கார்பைடு நிறுவனம் நிகழ்த்திய சம்பவம். யூனியன் கார்பைடு நிறுவனம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இயங்கி வந்தது. இது 50.1% யூனியன் கார்பைடு 49.1% மத்திய அரசு உதவியோடு இயங்கி வந்தது.
யூனியன் கார்பைடு பூச்சி கொல்லி தயாரித்த நிறுவனம். 1982 முதலே சின்ன சின்ன வாயு கசிவு விபத்துகள் நடந்துள்ளன.
அங்கு மித்தைல் ஐசோ சயனைட்க்கு மூன்று டேங்குகள் இருந்தன. அதில் ஒன்று காலியாக இருக்கவேண்டும் என்பதே பாதுகாப்பு நிபந்தனை. ஆனால் 1984 அக்டோபர் முதல் மூன்று டேங்கிலும் மிஐச இருந்துள்ளது.
மிஐச ஒரு மோசமான விச வாயு, அதை 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கவேண்டும்.
மிஐசவை திறன் குறைந்து வெளியேற்றும் வெண்ட் ஸ்ரப்பர்களும் பராமரிப்பு காரணமாக வேலை செய்யாமல் இருந்துள்ளன.
மிஐச டேங்கில் வால்வுகளும் சரியான முறையில் இல்லை.
இந்நிலையில் 1984 டிசம்பர் 2ம் தேதி இரண்டாவது ஷிப்ட் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.
42 டன் மிஐச உள்ள டேங்கை கழுவும் விதமாக தண்ணீர் செலுத்தப்பட்டுள்ளது.
தண்ணீரும், தண்ணீர் வரும் குழாய் துருப்பிடித்ததில் இருந்த இரும்பும் சேர்ந்து மித்தைல் ஐசோ சயனைட் வேதி வினை புரிய ஆரம்பித்தது. அதன் வெப்பநிலையும் அழுத்தமும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இரவு 10.30 மணிக்கு 2 பிஎஸ்ஐ அழுத்தம் இருந்தது. 11.00 மணிக்கு 10 பிஎஸ்ஐ ஆக உயர்ந்தது.
மேற்பார்வையாளர் அழுத்தமானியில் பிரச்சனை என்று நினைத்து கொண்டார். ஆனாலும் அதை கவனிக்க சொல்லி இருந்தார்.
இரவு 12.15 தேநீர் இடைவேளையின் போது விவாதித்து இருக்கிறார்கள். 12.40 க்கு மிகச் அதன் உச்சக்கட்ட வெப்பநிலையான 25 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டேங்கில் மேல் இருந்த காங்கிரீட்டில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.
ஆனால் பணியாளர் யாருக்கும் விபரீதம் தெரியவில்லை. பாதுகாப்பு சைரன் சரியாக இயக்கப்படவில்லை. தீயணைப்பு துறைக்கு மட்டுமே தகவல் சொல்லப்பட்டது.
30 டன் மித்தைல் ஐசோ சயனைட் 40 - 50 நிமிடங்களில் காற்றில் கலந்தது. அதிகாரபூர்வமாக 2259 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சு திணறல், உயிரிழப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு இதன் தாக்கம்.
ஆனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். போபாலின் ஹமீதா மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது கூட மருத்துவர்கள் அது மீத்தைல் ஐசோ சயனைட் பாதிப்பு என்று தெரிந்திருக்கவில்லை.
இந்த நிகழ்வால் யூனியன் கார்பைடு சிஇஓ வாரன் ஆண்டர்சனை வீட்டு காவலில் எடுத்து 24 மணி நேரத்துக்குள் தனி விமானத்தில் தப்பிக்க விட்டது மத்திய அரசு.
இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு தான் வழங்க வேண்டும், இந்திய அரசு தான் வழங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ஓடியது.
முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று சிறுநீரக சிகிச்சைக்கு வசதி செய்யப்படவில்லை.
ஆண்டர்சன் மீதான குற்றத்திற்கு தகுந்த சாட்சிகள் இல்லை என அமெரிக்கா, ஆண்டர்சனை இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது.
போபால் நகர மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை.
யூனியன் கார்பைடு பேக்டரி வளாகம் இன்றும் வேதிப்பொருள் குப்பை கிடங்காக அகற்றப்படாமல் கிடக்கிறது.
அதிகாரமும் அரசியலும் அறிவியலை முன்னிறுத்தி நடத்த பேரழிவு. உலகில் மோசமான பேரழிவாக இன்று வரை உள்ளது.
No comments:
Post a Comment