ஞாயிறுதோறும் வண்ண வண்ண
ஆடைகள் அணிந்து
இசையமைத்து பாடல்கள் பாடி
வேதபாடம் வாசித்து
முன்வைக்கப்படும் பிரார்த்தனைகளை
சிலுவையில் தொங்கியபடி
பார்ப்பார் !
மற்ற நாட்களில்
ஒற்றை மெழுகுவர்த்தியோட
வைக்கப்படும் உருக்கமான
பிரார்த்தனைகளை கேட்பார் !
தினமும் வந்து மொத்த
ஆலயத்தையும் சுத்தப்படுத்தும் பெண்
கடைசி படியின் தூசியை
துடைத்த பின் வைக்கும்
பிரார்த்தனை
நான் சுமக்கும்
சிலுவைகள் குறைய வேண்டும்
என்பதே
என்றாவது கேட்பார் பார்ப்பார்
என்ற நம்பிக்கையில்!!!
No comments:
Post a Comment