Thursday, 1 September 2022

பிரார்த்தனை

 ஞாயிறுதோறும் வண்ண வண்ண 

ஆடைகள் அணிந்து 

இசையமைத்து பாடல்கள் பாடி 

வேதபாடம் வாசித்து 

முன்வைக்கப்படும் பிரார்த்தனைகளை 

சிலுவையில் தொங்கியபடி

பார்ப்பார் !


மற்ற நாட்களில்

ஒற்றை மெழுகுவர்த்தியோட 

வைக்கப்படும் உருக்கமான 

பிரார்த்தனைகளை கேட்பார் !


தினமும் வந்து மொத்த 

ஆலயத்தையும் சுத்தப்படுத்தும் பெண்

கடைசி படியின் தூசியை 

துடைத்த பின் வைக்கும் 

பிரார்த்தனை 

நான் சுமக்கும்

சிலுவைகள் குறைய வேண்டும்

என்பதே 

என்றாவது கேட்பார் பார்ப்பார் 

என்ற நம்பிக்கையில்!!!





No comments:

Post a Comment