நாவல் பழ நிறத்துகாரர்
கோவணமும் துண்டும்
முழு நேர உடை
வேட்டி பகுதி நேர ஆடை !
ஊரே பயிர்செய்ய
ஆறை நம்பி இருந்த போது
கிணறை வெட்டி விவசாயம்
செய்தவர் !
ஆடும், மாடும் அவரது
அணிகலன்கள் !
மகனை ஆசிரியராக்கிய
பின்பும் ஆட்டாம்புழுக்கை
வாசத்தில் தொழுவத்தில்
தூங்குவது அவரது வழக்கம் !
விவசாயத்திலும் கால்நடை துறையிலும்
முனைவர் பட்டம் வாங்கும்
முனைப்பு உண்டு
படிப்பில்லா முதியவருக்கு !
காசநோய் தாக்கத்தால்
அரசு மருத்துவமனையில்
இருந்த நாளில்
வயலில்லா வாழ்க்கை,
ஓய்வறியா உழைப்பாளியின்
மனதை பாதித்தது!
மரணத்தருவாயில்
'மாட்டை பிடித்து கட்டு'
'கடலைச்செடி வாடி கிடக்கு' என
மருவிய அந்தக் கிழவன்
"மாடசாமி"
எங்கள் தாத்தா !!!
No comments:
Post a Comment