தன் வரலாறு என்றாலும் மொழிபெயர்ப்பில் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த புத்தகம்.
கேரளாவில் பிறந்த மணியன்பிள்ளை வாய்மொழி கூற்று போலவே எழுதியுள்ளார்.
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் மனதை கனக்க வைக்கிறார்.
மணியன் பிள்ளையின் புத்தி சாதுர்யம் வியக்க வைக்கிறது. குறிப்பாக இரட்டை நாய்கள் காவலுக்கு இருக்கும் அமெரிக்கர் வீட்டில் நிகழ்த்தும் திருட்டு.
மைசூரில் தொழிலதிபராகிவிட்ட அவரது வீழ்ச்சி பல்கலையில் பாடமாக வைக்கலாம்.
மலையாள மூலத்தில் சுவாரஸ்யம் இருக்குமா என்று தெரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் கவர்ந்து இழுக்கிறார் குளச்சல் யூசுப்.
தன் வரலாறு என்பதால் கோர்வையாக இல்லை. ஒரே நிகழ்வு திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதால் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பக்கங்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். வாசிக்க சிறப்பான புத்தகம்.
No comments:
Post a Comment