கலாதீபம் லொட்ஜ் வாசித்த போதே நான் வாசு முருகவேல் எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன். அதற்கு பிறகு வாசித்த ஜெப்னா பேக்கரியும் ஈர்த்தது.
மூன்றாவது நாவலாக மூத்த அகதியை வாசிக்க தூண்டியது. இந்த முறை களம் நயினா தீவோ, கொழும்போ, ஈழப்பகுதிகளோ அல்ல. சென்னை தான் களம்.
சென்னையில் பல காலம் வசிப்பவர்களுக்கு கூட எம்ஜிஆர் நகர் எங்கு இருக்கிறது என தெரியாது. எம்ஜிஆர் நகரை அறிமுகப்படுத்தி ஆரம்பித்துள்ளார்.
கேகே நகர் உயர்குடி மக்களின் கூடாரம் என்றால் எம்ஜிஆர் நகர், நெசபாக்கம் மத்திய தர மக்களின் கோட்டை. இதை எங்குமே இவர் கூறவில்லை என்றாலும் இவர் எழுத்துக்களில் உணர முடியும்.
மேட்டுக்குடி பெண்களின் சுதந்திரத்தை நாசூக்காக சொல்லி உள்ளார்.
அரசியல்வாதி இலங்கை தமிழர் என்று பேசுவதை கேட்டு "இலங்கை தமிழர் அல்ல ஈழ தமிழர்" என கோபப்படும், துவாரகனின் கோபம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் புரியாது.
சென்னையில் பல காலம் இருந்தாலும் அவர்களின் விருப்ப உணவு பாண், மரக்கறி பணிஸ் என்பதும் அவர்கள் தேவாரம் வாசிப்பதை நிறுத்தவில்லை என்பதும் ஈர்க்கிறது.
தாய் தமிழ் வாசு முருகவேலின் எழுத்தை என்னிடம் கொண்டு சேர்த்ததற்கு மகிழ்ந்தாலும், நான் வாழும் சென்னையில் அவர் அகதியாக வாழ்கிறார் என்பது மனதை வருத்துகிறது.
No comments:
Post a Comment