தனிக்குடித்தனம் தான் இன்றைய கால சூழலுக்கு சிறந்தது.
அந்த காலகட்டத்தில் கூட்டு குடும்பம் சிறப்பாக இருந்தது, காரணம் அன்றைய அம்மாக்கள், பாட்டிகள் தற்சார்பு உடையவர்களாக இல்லை. இன்று அப்படி இல்லை தனக்கென செல்போன் இருக்கிறது வேலைக்கு செல்லவில்லை என்றாலும் சிறிதளவேனும் பணம் கையில் வைத்து சுயசார்பு உடையவர்களாக உள்ளார்கள்.
மேலும் அந்த காலத்தில் குடும்ப தொழில் அல்லது குல தொழில்களையே செய்தனர். அப்பாவிற்கு பிறகு அண்ணன் தம்பிகள் அதே தொழிலை செய்தார்கள். லாபம் நட்டம் அவர்களுக்கு தெரிந்தே இருக்கும். இன்றைய சூழலில் அனைவருக்கும் வேலை என்பதே பெரும்பாடு. இதில் அண்ணன் தம்பிக்கு ஒரே வேலை எப்படி சாத்தியம்.
இன்று சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை அளவில் ஒரு சதவீதம் கூட தொழிற்சாலைகள் கிடையாது. தொழில் வளமும் படு மோசம். ஆகவே சென்னை நோக்கி படையெடுக்கின்றனர்.
அண்ணன் தம்பி இருவரும் சென்னையில் இருந்தாலும் ஒரே இடத்தில் வேலை என்பது சாத்தியமில்லை. பிறகு எப்படி கூட்டு குடும்பம்.
அது மட்டுமில்லாமல் இன்றைய நவீன யுகத்தில் உணவில் அதிக ருசியை எதிர்பார்க்கிறார்கள். ஓட்டலில் சாப்பிட்டால் கூட ஒவ்வொரு உணவுக்கும் வேறு வேறு ஓட்டலை பிடிக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உணவு சமைக்க தற்கால சூழலில் முடியாது. ஒரே உணவை அனைவரும் ஏற்கும் சூழலும் இல்லை.
சென்னையில் முக்கால்வாசி வீடுகளில் சிறிய அளவில் சமையலறை உள்ளது. அதில் இரண்டு பேர்களுக்கு மேல் நின்று வேலை செய்ய முடியாது. கூட்டு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அனைவருக்கும் சமைத்து போடும் எந்திரம் போல் ஆகிவிடுவார்.
வருமான வரியை குறைக்க லோன் போட்டு வீடு வாங்கி, லோனை அடைக்க வேறு வேறு கம்பெனிகள் மாறி கொண்டிருக்கும் நவீன யுகத்தில் இரண்டு மூன்று பேரின் சம்பளத்தை குவித்து ஒருவர் பட்ஜெட் போட்டு குடும்பத்தை கொண்டு செல்வது நடைமுறைக்கு சாத்தியமில்ல.
அப்பா அம்மாவோடு கூட்டு குடும்பம் சாத்தியம். அவர்களை சமைக்க, குழந்தைகளை பார்த்து கொள்ள வைக்கும் வேலைகாரர்களாக டீல் செய்யாதவரையில்.
No comments:
Post a Comment