1.
தத்லி பித்லி என
தொடங்கும்
தொட்டு பிடித்து
விளையாட்டில் சல்
வர வேண்டும் என்று
எப்போதும் வேண்டி
கொள்வேன்.
உப்புக்கு சப்பாணியாக
விளையாடும் நானும் !!!
2.
சிறு வயதில் எனக்கு தோன்றியது
வருங்காலத்தில் நமது கிராமத்திற்கு
நிறைய பேருந்துகள் வரும் என்று,
இரு சக்கர வாகனங்கள்
நிறைய வந்துவிட்டது !
எல்லா வீடுகளிலும்
வண்ண தொலைக்காட்சி
இருக்கும் என்று,
எல்லார் கைகளிலும்
அலைபேசி உள்ளது !
விவசாயம் சுருங்கும்
என்று ஒருபோதும்
தோன்றியதில்லை !!!
3.
பொம்மை ஸ்டெதஸ்கோப்பை
காதில் வைக்க கூச்சமாய்
இருப்பதால் கையில் வைத்து
கொண்டே மறுமுனையில்
என் இதய துடிப்பை
ஆராய்கிறாள் எங்கள்
இல்ல தேவதை
இந்த காட்சியில்
என்னிதயம் மகிழும்
என்று அவளுக்கு
தெரிந்திருக்குமா...
4
அடிக்கடி கடந்தது
தாம்பரம் சப்வே
ஒவ்வொரு முறையும்
ஊருக்கு போகும்
மகிழ்ச்சி இருக்கும் !
துரைசாமி சப்வே
அருகில் சுவரேறி
குதித்து கையேந்தி பவனில்
சிற்றுண்டி சாப்பிட்டு
அலுவலகம் சென்ற
நாட்கள் ஏராளம் !
சைதாப்பேட்டை மார்க்கெட்
சப்வே அருகில்
மேன்சன், கடைகள் என
இனிமையான நினைவுகள்
ஏராளம் !
மாலை மங்கும் நேரத்தில்
மவுண்ட் ரோடு சப்வேயில்
மங்கை ஒருத்தி கண்ணடித்து
அழைத்ததாக நண்பன் கூறினான்
அன்று முதல் மவுண்ட் ரோடு
சப்வே என்றால் பயம் !
பூங்கா ரயில் நிலைய சப்வேயில்
நான் கடக்கும் போதெல்லாம்
அடுத்த ரயிலை பிடிக்க
அவசரமாக எனக்கு எதிரில்
செல்வார்கள்
வடசென்னை மக்கள்
அவர்கள் முகத்தில்
அசதியை பார்த்ததில்லை !!!
No comments:
Post a Comment